Saif Ali Khan: பிரபல நடிகரை கத்தியால் குத்திய திருடன்.. வீட்டில் புகுந்து பகீர் செயல்.. மருத்துவமனையில் அனுமதி.!
நடிகரின் வீட்டிற்குள் நள்ளிரவில் புகுந்த மர்ம நபர், அவரை கத்தியால் குத்திய சம்பவம் கடும் அதிர்வலையை பாலிவுட் திரையுலகில் ஏற்படுத்தி இருக்கிறது.
ஜனவரி 16, பாந்த்ரா (Cinema News): மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை, பாந்த்ரா, மேற்கு சதகுரு சரண் பகுதியில் நடிகர் சைப் அலிகான் வசித்து வருகிறார். இவர் தனது மனைவி கரீனா கபூர், மகன்கள் தைமூர் (வயது 8), கெஜ் (வயது 4) ஆகியோருடன் இருக்கிறார். மற்றும் குடும்ப உறுப்பினர்களும் இவர்களுடன் தங்கி இருக்கிறார்கள். இதனிடையே, நேற்று நள்ளிரவு சுமார் 02:30 மணியளவில், இவர்களின் வீட்டினுள் புகுந்து திருட்டு முயற்சியில் ஈடுபட்ட மர்ம நபர் ஒருவர், நடிகர் சைப் அலிகானை கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது. பின் அவர் தப்பியோடியதாகவும் சொல்லப்படுகிறது. Bigg Boss Tamil Season 8: பணப்பெட்டி எடுக்க புயல் வேகத்தில் ஓடிய ரயான்.. ஆப்பு வைத்த பிக் பாஸ்..!
காவல்துறையினர் விசாரணை:
கத்திக்குத்து காயத்தால் பாதிக்கப்பட்ட சைப் அலிகானை மீட்ட குடும்பத்தினர், விரைந்து அவரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், மர்ம நபருக்கு வலைவீசி இருக்கின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் உண்டாக்கி இருக்கிறது.
மும்பை லீலாவதி மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்ட சைப் அலிகான்:
#Mumbai | Actor #SaifAliKhan is receiving treatment in Lilavati Hospital And Research Centre after he sustained injuries after an intruder barged in his home in Mumbai.
Visuals from outside the hospitalhttps://t.co/guonWDNX6B pic.twitter.com/djRYziMynP
— The Times Of India (@timesofindia) January 16, 2025
(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

