Aishwarya Rai (Photo Credit: @Instagram)

ஆகஸ்ட் 26, சென்னை (Cinema News): கடந்த 1994ஆம் ஆண்டு நடைபெற்ற உலக அழகிப் போட்டியில் கலந்து வெற்றிக் கொண்ட ஐஸ்வர்யா ராய்க்கும் (Aishwarya Rai) பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் மகனும் நடிகருமான அபிஷேக் பச்சனுக்கும் (Abhishek Bachchan) கடந்த 2007ஆம் ஆண்டு ஏப்ரல் 20ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. இவர்கள் இருவருக்கும் ஆராத்யா பச்சன் (Aaradhya Bachchan) என்ற மகள் உள்ளார். கடந்த சில மாதங்களாகவே இவர்கள் இருவருக்கும் இடையில் விவாகரத்து நடைபெறவுள்ளதாக தகவல்கள் கசிந்து வருகின்றன.

அபிஷேக் பச்சன் விளக்கம்: இதற்கிடையே தனக்கும் ஐஸ்வர்யா ராய்க்கும் விவாகரத்து நடைபெறவிருப்பதாக வெளியான தகவல் குறித்து அபிஷேக் பச்சன் விளக்கமளித்திருக்கிறார். அவர் பேசுகையில், "எனக்கும் ஐஸ்வர்யாவுக்கும் விவாகரத்து என்று வெளியாகும் செய்தி பற்றி பேச எதுவும் இல்லை. துரதிர்ஷ்டவசமாக அனைவரும் ஒரு பொய்யான செய்தியை பரப்புகிறார்கள். அது ஏன் செய்கிறார்கள் என்று எனக்கு புரிகிறது. நல்ல கதைகள் தேவைப்படுகின்றன. நாங்கள் பிரபலங்கள் என்பதால் எங்களை பயன்படுத்துகிறார்கள். எங்களுக்கு விவாகரத்து எல்லாம் ஆகவில்லை" என்றார். Amy Jackson and Ed Westwick Marriage: எமி ஜாக்சனின் 2வது கல்யாணம்.. பிரித்தானியா நடிகரை கரம்பிடித்த எமி..!

ஐஸ்வர்யா ராய் விளக்கம்: இந்நிலையில் நடிகை ஐஸ்வர்யா ராய் கொடுத்த பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது. குழந்தை பிறந்த பின்பு ஐஸ்வர்யா ராய் படங்களில் நடிப்பதனை குறைத்திருந்தார். இதுகுறித்த கேள்விக்கு பதிலளித்த ஐஸ்வர்யா ராய், "நான் திருமணத்தில் மகிழ்ச்சியாக இருக்கிறேன், குழந்தையால் மகிழ்வாக்கின்றேன். அதற்காக தன்னை இழப்பதில் எந்த கேள்வியும் இல்லை" என்றார். மேலும் ஐஸ்வர்யா தனது வேலையை தொடர்ந்து ரசித்து வருவதாகவும், சரியான ஸ்கிரிப்ட் வந்தால் அவருடன் ஒரு படத்தில் ஒத்துழைக்க விரும்புவதாகவும் என்று கூறியுள்ளார்.