ஆகஸ்ட் 28, திருவனந்தபுரம் (Kerala News): கேரள மாநிலம், வடக்கு மாவட்டமான பேலூரில் உள்ள காசர்கோடு அருகே காஞ்சங்காடு அம்பலத்தரை பகுதியை சேர்ந்த தம்பதி கோபி முலவேணிவீடு (வயது 56) - இந்திரா (வயது 54). இத்தம்பதிக்கு ராஜேஷ் (வயது 36), ராகேஷ் (வயது 35) ஆகிய இரு மகன்கள் இருந்தனர். இந்நிலையில், குடும்ப செலவிற்காக கோபி அதிக கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. வாங்கிய பணத்தை செலுத்த தவறியதால், கடன் கொடுத்தவர்கள் பணத்தை கேட்டுத் தொல்லை கொடுத்துள்ளனர். திருமணமான பெண்ணுடன் தனிமையில் சந்தித்த காதலன்.. அடுத்து நடந்த கொடூர சம்பவம்..!
3 பேர் தற்கொலை:
இந்நிலையில், இன்று (ஆகஸ்ட் 28) அதிகாலை 3.30 மணியளவில் 4 பேரும் வீட்டில் (Suicide) மயங்கிக் கிடந்தனர். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் 4 பேரையும் மீட்டு, மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால், செல்லும் வழியிலேயே கோபி, அவரது மனைவி இந்திரா மற்றும் மூத்த மகன் ராஜேஷ் ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். இளைய மகன் உயிருக்கு ஆபத்தான நிலையில் கண்ணூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இதுதொடர்பாக, காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தற்கொலை தடுப்பு மற்றும் மனநல உதவி எண்கள்:
டெலி மனாஸ் (Tele Manas) சுகாதார அமைச்சகம் - 14416 அல்லது 1800 891 4416; நிம்ஹான்ஸ் (NIMHANS) + 91 80 26995000 / 5100 / 5200 / 5300 / 5400; பீக் மைண்ட் (Peak Mind) - 080 456 87786; வந்த்ரேவாலா அறக்கட்டளை - 9999 666 555; அர்பிதா தற்கொலை தடுப்பு உதவி எண் - 080-23655557; iCALL - 022-25521111 மற்றும் 9152987821; COOJ மனநல அறக்கட்டளை - 0832-2252525, தற்கொலை தடுப்பு மையம் கோயம்புத்தூர் - 0422-2300999, சினேகா தற்கொலை தடுப்பு மையம் சென்னை - +91 44 2464 0060 மற்றும் +91 44 2464 0050.