செப்டம்பர் 22, சென்னை (Festival News): புரட்டாசி மாதத்தில் கடைபிடிக்கப்படும் மகாளய அமாவாசை முன்னோர்கள் வழிபாட்டுக்கு முக்கியத்துவமானதாக கருதப்படுகிறது. பிற மாதங்களில் அமாவாசை நாளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கப்படும் நிலையில், புரட்டாசி மாதத்தின் அமாவாசைக்கு 15 நாட்களுக்கு முன்னர் கொடுக்கப்படும் தர்ப்பணம் முன்னோர்களின் நல்லாட்சியைப் பெற சிறந்த காலமாக கருதப்படுகிறது. முன்னோர்களின் ஆன்மா சாந்தி அடையாமல் இருக்கும் பட்சத்தில் மகாளய அமாவாசை அன்று தர்ப்பணம் கொடுத்தால் தலைமுறை தாண்டி நன்மைகள் கிடைக்கும் என சாஸ்திரங்களும் சொல்கின்றன. மகாளய பட்சத்தில் தர்ப்பணம் கொடுக்க முடியாதவர்கள் மகாளய அமாவாசை அன்று தவறாமல் தர்ப்பணம் (Pitru Tarpanam) கொடுக்கலாம். வெளிநாட்டில் இருப்பவர்கள், வெளியூர்களில் இருப்பவர்கள் நீர்நிலைகளுக்கு சென்று தர்ப்பணம் கொடுத்தும் வழிபடலாம். வீட்டில் தர்ப்பணம் கொடுக்க தாம்பூலம் வைத்து கருப்பு எள் வைத்து நீர் ஊற்றி முன்னோர்களுக்கு வழிபாடு (Amavasya Fasting) செய்ய வேண்டும். அவர்களின் பெயரைச் சொல்லி மூன்று முறை நீர் விடவும். இந்த நீரை கால் படாத இடத்தில் ஆறு, குளம், ஏரி, கிணறு போன்ற இடங்களில் ஊற்றலாம். மஹாளய அம்மாவாசை 2025 (Vinayagar Chathurthi 2025) நாளில் உங்களது நண்பர்கள், குடும்பத்தினருடன் வாழ்த்துக்களை பகிர லேட்டஸ்ட்லி தமிழ் (LatestLY Tamil) வாழ்த்து செய்திகளை பகிர்ந்துள்ளது. இதனை நீங்கள் வாட்சப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்றவற்றிலும் பகிரலாம். Mahalaya Amavasya: மகாளய அமாவாசையில் தர்ப்பணம் கொடுக்க உகந்த நேரம்.. முன்னோர் ஆசி பெற விரதம் இருக்கும் முறை.!
1. அனைவருக்கும் மகாளய அமாவாசை நல்வாழ்த்துக்கள்!

2. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் எனது அன்பான மகாளய அமாவாசை நல்வாழ்த்துக்கள்!

3. அன்னை துர்க்கையின் ஆசீர்வாதம் நமக்கு முன்னேற்றத்தை கொடுக்கட்டும்! மகாளய அமாவாசை நல்வாழ்த்துக்கள்

4. முன்னோர்களின் ஆசி கிடைக்க மகாளய அமாவாசை நாளை சிறப்பிப்போம்! மகாளய அமாவாசை நல்வாழ்த்துக்கள்

5. தலைமுறை செழிக்க முன்னோர்களின் அருளைத்தரும் மகாளய அமாவாசை!
