9 Died in Accident: அதிவேக பயணத்தால் நொடியில் நடந்த கோர விபத்து; உருக்குலைந்த கார்., 9 பேர் பரிதாப பலி.!

ஸ்கார்பியோ கார் தறிகெட்டு இயங்கிய நிலையில், அதிவேகம் காரில் பயணம் செய்தவர்களின் மரணத்திற்கு வழிவகை செய்துள்ளதை விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு.

9 Died in Accident: அதிவேக பயணத்தால் நொடியில் நடந்த கோர விபத்து; உருக்குலைந்த கார்., 9 பேர் பரிதாப பலி.!
Bihar Kaimur Accident (Photo Credit: @ANI X)

பிப்ரவரி 26, கைமுர் (Bihar News): பீகார் மாநிலத்தில் உள்ள சசாரத்தில் இருந்து, வாரணாசி நோக்கி காரில் 9 பேர் பயணம் செய்துகொண்டு இருந்தனர். இவர்கள் பயணித்த வாகனம் கைமுர் (Kaimur Container Lorry Car Crash) மாவட்டம், மொஹானியா காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் தேவ்களி என்ற இடத்தில் சென்றது.

தறிகெட்டு இயங்கி சோகம்: அதிவேகத்தில் கார் இயங்கியதாக தெரியவரும் நிலையில், தேசிய நெடுஞ்சாலை எண் 2ல் கார் - கனரக லாரி நேருக்கு நேர் மோதி விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் கார் முற்றிலும் உருகுலைந்துவிட, காரில் பயணம் செய்த 9 பேரும் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். PM Modi Dwarka Visit: நனவாகிய பிரதமர் மோடியின் கனவு - துவராகவில் நேரடி தரிசனம் செய்த பிரதமர்..! 

லாரியில் மோதி விபத்து: ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து அதிவேகத்தில் சாலையின் எதிர்திசையில் தறிகெட்டு புகுந்த கார் லாரியின் மீது மோதி விபத்தில் சிக்கி இருக்கிறது. விபத்து குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர், நிகழ்விடத்திற்கு விரைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.

9 பேர் பலி: காயமடைந்த நபர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். உயிரிழந்த 9 பேரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. இவ்விபத்தால் சாலையில் வாகன நெரிசல் காணப்படவே, அதிகாரிகள் அதனை சீர் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

விபத்தில் பலியானோரின் விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.

(The above story first appeared on LatestLY on Feb 26, 2024 07:26 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).