ஜூலை 15, இந்தூர் (Madhya Pradesh News): மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள இந்தூரில் வசித்து வரும் நபர் ராஜு. இவருக்கும் பக்கத்து வீட்டில் வசித்து வரும் நபருக்கும் இடையே சொத்து தகராறு இருந்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் எந்த நேரத்திலும் தான் கொல்லப்படலாம் என்று அச்சப்பட்ட நபர், தனது தலைக்கவசத்தில் சிசிடிவி கேமராவை பொருத்தி வெளியே பொது இடங்களுக்கு செல்லும்போது பயன்படுத்தி வருகிறார். மேலும் தான் ஒரு வேலை கொல்லப்படும் பட்சத்தில் இந்த கேமரா பதிவான காட்சிகள் ஆதாரமாக இருக்கக்கூடும் என்றும், அதன் வாயிலாக எதிரிகளை தண்டிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்துள்ளார். இதுகுறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தலைக்கவசத்தில் சிசிடிவி கேமராவுடன் அலையும் நபரின் வீடியோ :

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)