மே 19, பாக்பத் (Uttar Pradesh News): உத்தர பிரதேச மாநிலம், பாக்பத்தில் (Baghpat) சப்ரௌலி பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் தூங்கிக் கொண்டிருந்த ஊழியரை இரவில் ஒரு நாகப்பாம்பு கடித்துள்ளது. மனோஜ் என்ற வாலிபர் ஹோட்டலில் சமையல்காரராக வேலை பார்த்து வந்துள்ளார். இரவில் ஹோட்டலில் தூங்கிக் கொண்டிருந்தார். வைரலான சிசிடிவி வீடியோவில் பாம்பு, அவரை 2 முறை கடித்திருப்பது (Snake Bite) தெளிவாகத் தெரிகிறது. கடித்த சிறிது நேரத்திற்குப் பிறகு, அவர் பீதியுடன் எழுந்தார். பின்னர், ஹோட்டல் உரிமையாளர் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். ஆனால், கொண்டு செல்ல தாமதமானதால் அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. காருக்குள் சிக்கி 4 குழந்தைகள் மூச்சுத்திணறி பலி.. சோக சம்பவம்..!
வீடியோ இதோ:
मौत कब और कहा आ जाए कहा नहीं जा सकता। CC कैमरे की वीडियो UP के बागपत की है। जहाँ छपरौली के होटल मे सोए एक कर्मचारी मनोज को सोते हुए कोबरा साँप ने डस लिया। मनोज होटल मे रसोइया था.. #viralvideo मे दिख रहा है की 2 बार साँप ने उसे डसा... इसके बाद वह बाहर जाकर चिल्लाता है। होटल स्वामी… pic.twitter.com/oBhE4U9BjA
— TRUE STORY (@TrueStoryUP) May 18, 2025
(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)