மார்ச் 18, ஆலங்குடி (Pudukkottai News): தமிழகத்தில் அரசுப்பள்ளி ஆண்டு விழாவில் மாணவர்-மாணவி கட்டிப்பிடித்து நடனமாடும் வீடியோ ஒன்று, ''பெற்றோர்களே உஷார்'' என்று தலைப்பிட்டு வாட்ஸ் அப்பில் இந்த வீடியோ வைரலாகி வருகிறது. இந்நிலையில், தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகம் இதுகுறித்த விளக்கத்தை அளித்துள்ளது. அதில், அரசுப்பள்ளி ஆண்டு விழாவில் ஆடல் பாடல் நடைபெறவில்லை. தவறான காணாளி பரவி வருகிறது. இது அரசுப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சி அல்ல. அதில், நடனமாடுபவர்கள் அரசுப்பள்ளி மாணவ-மாணவிகளும் அல்ல. இந்த வீடியோ, புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆலங்குடி அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில் தஞ்சாவூரைச் சேர்ந்த நடனக் குழுவினர், பள்ளிச் சீருடை அணிந்து திரைப்பட பாடலுக்கு நடனம் ஆடியுள்ளனர். இதனை அரசுப் பள்ளியில் நடத்தப்பட்ட நிகழ்ச்சி என்று தவறாகப் பரப்பி வருகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. "அப்பா அடிப்பாரு, அம்மா திட்டும்" - வீட்டிலிருந்து வெளியேறிய 10 வயது சிறுமி.. தெய்வத்தை திருப்பிக்கொடுத்த இளைஞர்.. குவிந்த பாராட்டு.!

வீடியோ இதோ:

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)