வானிலை: சென்னைக்கு மழை எச்சரிக்கை.. தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் பொளக்கப்போகும் மழை.!

Rain Alert: தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்திற்கு 10 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை (Weather Today) பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வானிலை: சென்னைக்கு மழை எச்சரிக்கை.. தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் பொளக்கப்போகும் மழை.!
Chennai Rains | File Pic (Photo Credit: @Unmai_Kasakkum X)

அக்டோபர் 27, நுங்கம்பாக்கம் (Chennai News): தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 10 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் புயலாக வலுவடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்திற்கு மழைக்கு வாய்ப்புள்ளது. அதன்படி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் இடி,  மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கும், கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கும்  வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. Gold Rate Today: தங்கப்பிரியர்களுக்கு நற்செய்தி.. உயர்வின் உச்சிக்கு சென்று மீண்டும் சரிய தொடங்கிய தங்கம் விலை.!

மழை எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்:

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Oct 27, 2025 11:17 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).