Hybrid Wolf Dog Pet Killed Baby: 3 வயது பச்சிளம் குழந்தை கடித்துக்குதறி கொலை செய்த நாய்: நரியின் கலப்பின செல்லப்பிராணியால் நடந்த சோகம்.!
மனிதன் முதல் விலங்குகள், பறவைகள் என ஒவ்வொன்றுக்கும் குணம் அதன் படைப்பை பொறுத்து வேறுபடும். என்னதான் நாம் சிங்கத்துக்கு சோறுபோட்டு வளர்த்தாலும், அதன் மூலையில் சேமித்து வைக்கப்பட்டுள்ள மரபணு, அதன் இயல்பை எட்டவைக்கும்போது குணம் தெரியவரும்.
டிசம்பர் 05, அலபாமா (Alabama): அமெரிக்காவில் உள்ள அலபாமா மாகாணம், செல்பி கவுண்டி, செல்சா சிட்டியில் கடந்த நவம்பர் 30ம் தேதி 3 மாதங்களான பச்சிளம் குழந்தை நாயினால் (Pet Dog Killed Baby) கடித்து குதறி உயிருக்கு போராடுவதாக அவசர அழைப்புக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தபோது உயிரிழப்பு உறுதி செய்யப்பட்டது. விசாரணையில், நரியில் இருந்து உருவான கலப்பின நாய், வீட்டில் செல்லப்பிராணியாக வளர்க்கப்பட்டு வந்துள்ளது. இந்த நாய் குழந்தையை கடித்து குதறியதில் சோகம் நடந்துள்ளது. அமெரிக்காவை பொறுத்தமட்டில் அந்நாட்டு அரசால் நரியில் இருந்து உருவாகும் கலப்பின நாய்கள், செல்லப்பிராணியாக வளர்க்கப்பட சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்படுகிறது. பலரும் அதனை விரும்பி வளர்க்கவும் செய்கின்றனர். இதுவே அவர்களின் குழந்தைகளுக்கு எமனாக மாறுகிறது. Online Order Shocker: மளிகைப்பொருட்கள் ஆர்டர் செய்தவருக்கு மனிதக்கழிவை பார்சல் செய்த பகீர் சம்பவம்..! இப்படியும் நடக்குமா?..!
Wolf-dog hybrid kept as family pet kills child in Alabama https://t.co/vsjL8Wf2Ar pic.twitter.com/CsaMBU2c5D
— The Independent (@Independent) December 5, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Dec 05, 2023 02:43 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

