
மே 26, ஜெய்பூர் (Sports News): டாடா ஐபிஎல் 2025 (TATA IPL 2025) போட்டியில், நேற்று (மே 25) நடந்த சென்னை - குஜராத் அணிகளுக்கு இடையேயான ஆட்டத்தில் சென்னை அணி 83 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதேபோல, ஹைதராபாத் - கொல்கத்தா அணிகளுக்கு இடையேயான ஆட்டத்தில், ஹைதராபாத் அணி 110 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்நிலையில், இன்று (மே 26) நடப்பு ஐபிஎல் தொடரின் 69வது ஆட்டத்தில், பஞ்சாப் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தில் இருக்கும் பஞ்சாப் அணி, 4வது இடத்தில் இருக்கும் மும்பை அணியுடன் மோதுகிறது. PBKS Vs MI: வெற்றிபடிக்கட்டில் முன்னேறுமா மும்பை? இன்று பஞ்சாப் அணியுடன் மோதல்.!
பஞ்சாப் கிங்ஸ் எதிர் மும்பை இந்தியன்ஸ் (Punjab Kings Vs Mumbai Indians IPL 2025):
இப்போட்டியில், டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ரியான் ரிக்கல்டன் - ரோஹித் சர்மா ஜோடி தொடக்கம் கொடுத்தது. அதிரடியாக விளையாடிய ரிக்கல்டன் 27, ரோஹித் 24 ரன்னிலும் அவுட்டாகி பெவிலியன் திரும்பினர். மறுபுறம், அதிரடியாக விளையாடி வந்த சூர்ய குமார் யாதவ் (Suryakumar Yadav) ஐபிஎல் வரலாற்றில் ஒரு புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். இப்போட்டியில், 8வது ஓவரின் 6வது பந்தில் கைல் ஜெமிஷன் வீசிய பந்தை பவுண்டரி அடித்தார். அதன் மூலம், தொடர்ச்சியாக, அதிக இன்னிங்ஸில் (14) 25+ ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்தார். ஏற்கனவே, கேன் வில்லியம்சன் 2018 ஐபிஎல் தொடரில் தொடர்ச்சியாக 13 இன்னிங்ஸிலும், சுப்மன் கில் 2023 ஐபிஎல் தொடரில் 13 இன்னிங்ஸிலும் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளனர்.