![](https://static.latestly.com/File-upload-v3/o/p/4NqciJt1B8gIsZFwY23kB10uvfvtKQdVvjUutMrKYPj3e6kq5VzARfRWM---ndIi/n/bmd8qrbo34g7/b/File-upload-v3/o/upload-test-dev/uploads/images/2025/02/chennai-central-to-avadi-route-railway-station-photo-credit-drmchennai-x-.jpg?width=380&height=214)
பிப்ரவரி 13, சென்ட்ரல் இரயில் நிலையம் (Chennai News): தலைநகர் சென்னையின் போக்குவரத்தில், மிகப்பெரிய பங்கை கொண்ட புறநகர் மின்சார (Chennai EMU Train Service) இரயில் சேவை, ஒருசில நேரங்களில் தண்டவாள பராமரிப்பு பணிகளுக்காக நிறுத்தப்படும். அந்த வகையில், சென்னையில் உள்ள கவரப்பேட்டை - பொன்னேரி இடையே தண்டவாளத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், இன்று 23 புறநகர் மின்சார இரயில் சேவைகள் முற்றிலும் இரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக உட்கட்சி விவகாரத்தை தேர்தல் ஆணையம் விசாரிக்கலாம் - நீதிமன்றம் அனுமதி.!
இரயில்கள் ரத்து செய்யப்பட்டதன் விபரம் பின்வருமாறு.,
இதனால் சென்னை கும்மிடிப்பூண்டி, ஆவடி, நெல்லூர் - சூலூர்பேட்டை உட்பட பல்வேறு வழித்தடத்தில் இயங்கும் இரயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை இரயில்வே கோட்ட மேலாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின்படி, மூர் மார்க்கெட் - சூலூர்பேட்டை, மூர் மார்க்கெட் - கும்மிடிப்பூண்டி, சென்னை கடற்கரை - கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை - நெல்லூர், மூர் மார்க்கெட் - ஆவடி ஆகிய வழித்தடத்தில் இயங்கும் 23 இரயில்கள் முற்றிலும் இருமார்க்கத்திலும் ரத்து செய்யப்படுகிறது. இன்று காலை 09:00 மணிமுதல் மாலை 03:00 மணிவரை இரயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
சென்னை கோட்ட மேலாளர் இரயில்கள் ரத்து தொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பு:
As part of ongoing engineering works, Line Block/Signal Block is permitted in #ChennaiCentral – #Gudur section between #Ponneri & #Kavaraipettai Railway Stations on 13th February 2025.
Passengers, kindly take note.#RailwayAlert pic.twitter.com/Qj7GeX6zTo
— DRM Chennai (@DrmChennai) February 12, 2025