Toll Plaza Smashed: பயன்பாட்டுக்கு வந்த அன்றே சம்பவம்.. விவசாயிகள், பொதுமக்களால் சூறையாடப்பட்ட சுங்கச்சாவடி..!

சாலை பணிகள் நடைபெறாமல் திறக்கப்பட சுங்கச்சாவடிக்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த போராட்டத்தின் முடிவில், சுங்கச்சாவடி போராட்டக்காரர்களால் அடித்து நொறுக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.

Toll Plaza Smashed: பயன்பாட்டுக்கு வந்த அன்றே சம்பவம்.. விவசாயிகள், பொதுமக்களால் சூறையாடப்பட்ட சுங்கச்சாவடி..!
Dindigul Vathalagundu Toll Gate Smashed (Photo Credit: @BillaAshwin X)

மார்ச் 12, வத்தலகுண்டு (Dindigul News): திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலகுண்டு (Batlagundu), லட்சுமிபுரம், திண்டுக்கல் - குமுளி தேசிய நெடுஞ்சாலையில் புதிதாக சுங்கச்சாவடி அமைக்கப்பட்டது. நான்கு வழிச்சாலை பணிகள் நிறைவுபெறாமல் இருக்கும் நிலையில், வத்தலக்குண்டு சுங்கச்சாவடி (Vathalagund) இன்று காலை முதல் செயல்படும் என அறிவிக்கப்பட்டு, சுங்கச்சாவடி செயல்பாட்டில் வந்தது. சாலை பணிகளே நிறைவுபெறாத நிலையில், சுங்கச்சாவடி செயல்படக்கூடாது என உள்ளூர் மக்கள் முன்னதாகவே கண்டன குரல் எழுப்பி இருந்தனர். Rowdy Murdered: காஞ்சிபுரத்தில் பயங்கரம்.. ரௌடி வெடிகுண்டு வீசி, சரமாரியாக வெட்டிப்படுகொலை..! 

முற்றிலும் அடித்து நொறுக்கப்பட்டது:

இந்நிலையில், இன்று காலை முதல் சுங்கச்சாவடி செயல்பாட்டுக்கு வந்த நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து முற்றுகை போராட்டம் நடத்தப்பட்டது. பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் சார்பில் நடந்த சுங்கச்சாவடி முற்றுகை போராட்டத்தில், ஒருகட்டத்தில் சுங்கச்சாவடி மொத்தமாக அடித்து நொறுக்கப்பட்டது. நிகழ்விடத்திற்கு காவல்துறையினர் வருவதற்குள் அனைத்து சம்பவமும் நடைபெற்று முடிந்தது. சுங்கச்சாவடி சூறையாடப்பட்ட தகவல் அறிந்த காவல்துறையினர், நிகழ்விடத்திற்கு விரைந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள விடீயோவின் அடிப்படையில், சுங்கச்சாவடியை தாக்கியவர்கள் விபரங்களை அதிகாரிகள் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சுங்கச்சாவடி அடித்து நொறுக்கப்பட்ட காணொளி:

(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).