
மே 16, சென்னை (Chennai News): தமிழ்நாடு மாநில சந்தைப்படுத்தல் கழகம் லிமிடெட் (TASMAC) மற்றும் அதனுடன் தொடர்புடைய நிறுவனங்கள் மற்றும் நபர்கள் தொடர்பான பல்வேறு குற்றங்களுக்காக, PMLA, 2002 இன் விதிகளின் கீழ், மாநிலத்தின் பல மாவட்டங்களில் உள்ள பல்வேறு இடங்களில் ED ரெய்டு நடத்தி வருகிறது. 11th Board Exam Result: வெளியானது +1 பொதுத் தேர்வு முடிவுகள்.. 92.09% மாணவர்கள் தேர்ச்சி..!
டாஸ்மாக் மதுபான முறைகேடு:
தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுபான முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக கடந்த மாதம் மார்ச் 6ஆம் தேதியிலிருந்து 3 நாள்கள் சென்னையில் உள்ள டாஸ்மாக் அலுவலகம் உள்ளிட்ட 7 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சோதனையில் பல்வேறு முறைகேடுகள் நடந்த ஆவணங்கள் சிக்கியது. டாஸ்மாக் நிறுவனத்தில் உயர் அதிகாரிகள், மதுபான நிறுவனங்களுடன் தொடர்பில் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. டாஸ்மாக் மூலம் அரசு கணக்கில் சேராமல் ரூ.1000 கோடிக்கு முறைகேடு நடந்துள்ளதாக அமலாக்கத்துறை அறிக்கை வெளியிட்டது. அதனைத் தொடர்ந்து, கடந்த மாதம் சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறை மீண்டும் சோதனை நடத்தியது. அதிலும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்பட்டது.
அமலாக்கத்துறை சோதனை:
இந்நிலையில், இன்று (மே 16) காலை முதல் மணப்பாக்கத்தில் இருக்கும் டாஸ்மாக் மேலாண் இயக்குநர் விசாகன் இல்லத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. சூளைமேடு பகுதியில் இருக்கும் எஸ்.என்.ஜே நிறுவனம், திருவல்லிக்கேணியில் தொழிலதிபர் ஒருவர் வீட்டிலும், தேனாம்பேட்டை, தி நகர் உள்ளிட்ட பல இடங்களில் அமலாக்கத்துறை சோதனையில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
ED சோதனை நடைபெற்று வரும் சென்னை சூளைமேட்டில் உள்ள வீடியோ:
#WATCH | Tamil Nadu: ED Chennai is conducting raids at various premises across many districts of the state under the provisions of PMLA, 2002 for various offences related to Tamil Nadu State Marketing Corporation Limited (TASMAC) and its associated entities and persons. According… pic.twitter.com/HBMgMEAkCo
— ANI (@ANI) May 16, 2025