Viluppuram News: ஆற்றில் மூழ்கி 3 பேர் பலி.. குளிக்க சென்ற இடத்தில் நேர்ந்த சோகம்..!

விழுப்புரத்தில் ஆற்றில் குளிக்க சென்ற 3 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Viluppuram News: ஆற்றில் மூழ்கி 3 பேர் பலி.. குளிக்க சென்ற இடத்தில் நேர்ந்த சோகம்..!
3 People Drowned in Viluppuram (Photo Credit: @News18TamilNadu X)

மே 21, விழுப்புரம் (Viluppuram News): விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அரசூர் பகுதியில் மலட்டாற்றில் 3 பேர் குளிக்க சென்றனர். அப்போது, எதிர்பாராதவிதமாக 3 பேரும் ஆற்றில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்கள், 3 பேருக்கும் நீச்சல் தெரியாமல் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. Salem News: நகைக்காக மூதாட்டி அடித்துக்கொலை? தோட்டத்தில் சடலம்.. சேலத்தில் பேரதிர்ச்சி.!

3 பேர் நீரில் மூழ்கி பலி:

இதுதொடர்பாக, காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், உயிரிழந்தவர்கள் (Child Death) அரசூரைச் சேர்ந்த சிவசங்கிரி (வயது 20), அபிநயா (வயது 15) மற்றும் தட்டம்பாளையத்தைச் சேர்ந்த ராஜேஷ் (வயது 15) ஆகிய 3 பேர் என அடையாளம் காணப்பட்டது. இதில் சிவசங்கிரி, அபிநயா ஆகிய இருவரும் உடன் பிறந்த சகோதரிகள் ஆவர். இவர்களின் உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

(The above story first appeared on LatestLY on May 21, 2025 03:48 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).