Shubhanshu Shukla (Photo Credit: @thenewsdrum X)

ஜூலை 14, டெல்லி (Technology News): அமெரிக்காவின் புளோரிடாவில் மாகாணத்தில் இருந்து ஸ்பேஸ் எக்ஸ் (SpaceX) நிறுவனத்தின், டிராகன் விண்கலம் மூலம் ஆக்சியம் 4 மிஷன் (Axiom 4 Mission) திட்டத்தில், இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட 4 பேர் கொண்ட குழுவினர், கடந்த ஜூன் 25ஆம் தேதி சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்றனர். அங்கு பல்வேறு முக்கிய ஆய்வுகளை மேற்கொண்டனர். YouTube: யூடியூபர்களுக்கு செக்.. இனி இந்த வீடியோக்களுக்கு பணம் கிடையாது.!

சுபான்ஷு சுக்லா:

இந்நிலையில் இன்று (ஜூலை 14) பூமிக்கு திரும்புவதற்காக டிராகன் விண்கலத்திற்குள் கேப்டன் சுபான்ஷு சுக்லா உட்பட 4 விண்வெளி வீரர்கள் சென்றனர். பின்னர், இந்திய நேரப்படி, மாலை 4.15 மணிக்கு சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து விண்கலம் தனியாக பிரிந்தது. தொடர்ந்து, மாலை 4.35 மணிக்கு விண்கலத்தின் பயணம் தொடங்கியது. டிராகன் விண்கலம், நாளை (ஜூலை 15) மதியம் 3 மணிக்கு பூமி வந்தடையும் என கூறப்படுகிறது. வட அமெரிக்காவின், பசிபிக் பெருங்கடலை ஒட்டியுள்ள கலிபோர்னியாவின் கடற்கரையில், டிராகன் விண்கலத்தை பாதுகாப்பாக தரையிறக்க திட்டமிடப்பட்டுள்ளது.