Army Plane Crash: ராணுவ விமானம் விபத்து; 10 பேர் பலி.. சோக சம்பவம்..!
சூடானில் ராணுவ விமானம் விபத்துக்குள்ளானதில், 10 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிப்ரவரி 26, கார்ட்டூம் (World News): வட ஆப்பிரிக்க நாடான சூடானில் இராணுவ விமானம் (Plane Crash) விபத்துக்குள்ளானதில் 10 பேர் உயிரிழந்தனர். நேற்று (பிப்ரவரி 25) இரவு கார்ட்டூமுக்கு அருகிலுள்ள வாடி சீட்னா விமானத் தளத்திலிருந்து ஒரு இராணுவ விமானம் புறப்பட்டது. ஆனால், ஓடுபாதையில் ஓடிக்கொண்டிருந்த விமானம், திடீரென விபத்துக்குள்ளானது. Child Abuse Case: 30 ஆண்டுகளில் 300 குழந்தைகளை சீரழித்த மருத்துவர்.. அதிர்ச்சி சம்பவம்..!
விமான விபத்தில் 10 பேர் பலி:
விபத்தில் ராணுவ அதிகாரிகள், பொதுமக்கள் உட்பட மொத்தம் 10 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் காயமடைந்தனர். இதுகுறித்து, தகவலறிந்த அதிகாரிகள் உடனடியாக மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். விபத்தில் படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். விமானம் தீப்பிடித்ததும் தீயணைப்பு வீரர்கள் நடவடிக்கை எடுத்தனர். விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
வீடியோ இதோ:
🚨⚡️ A military plane belonging to the Sudanese army crashed in Omdurman, resulting in fatalities.pic.twitter.com/t3smlKpsGk
— RussiaNews 🇷🇺 (@mog_russEN) February 26, 2025
(The above story first appeared on LatestLY on Feb 26, 2025 01:27 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

