Dallas Airport: விமான நிலையத்தில் மக்களின் முகம் சுளிக்க வைத்த பெண்ணின் செயல்.. நிர்வாணமாக வந்து ரகளை.!

பலநூற்றுக்கணக்கான மக்கள் தங்களின் விமான பயணத்துக்காக காத்திருந்தபோது, பெண் ஒருவர் செய்த அதிர்ச்சிதரும் சம்பவம், மக்களை முகம் சுளிக்க வைத்தது.

Dallas Airport: விமான நிலையத்தில் மக்களின் முகம் சுளிக்க வைத்த பெண்ணின் செயல்.. நிர்வாணமாக வந்து ரகளை.!
Dallas Airport Woman Case (Photo Credit: @JDunlap1974 X)

மார்ச் 26, டல்லஸ் (World News): அமெரிக்காவில் உள்ள மக்களில் சிலர், இயற்கையுடன் ஒன்றி வாழ்தல் அல்லது பாலின சமத்துவம் எண்ணம் மேலோங்குதல் என்ற பெயரில், உடலில் ஆடைகள் இன்றி திடீரென பொதுஇடங்களில் உலாவுவது நடக்கிறது. இவ்வாறான எண்ணம் கொண்ட மக்கள், ஒருசில நேரம் ஒருங்கிணைந்து, ஏதேனும் ஒரு இடத்தில் சந்தித்துக்கொள்வதும் நடக்கிறது. இவ்வாறான சந்திப்பின் போது, சிறுமி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதாகவும் கடந்த காலங்களில் புகார்கள் எழுந்துள்ளன. Three New Airlines in 2025: இந்தியாவுக்கு 3 புதிய விமான நிறுவனங்கள்.. வளர்ச்சியை நோக்கி விமானப் போக்குவரத்துத்துறை..! 

மக்களை முகம் சுளிக்க வைத்த பெண்:

இந்நிலையில், அமெரிக்காவில் உள்ள டல்லஸ் போர்ட் சர்வதேச விமான நிலையத்தில் (Dallas Fort Worth International Airport), இளம்பெண் ஒருவர் நிர்வாணமாக தோன்றினார். நிர்வாணமாக தோன்றிய பெண்மணி, விமான நிலையத்தில் இருக்கும் டிக்கெட் அறையில் பிரச்சனை செய்து, அங்கிருந்த மானிட்டர்களை சேதப்படுத்தினர். பின் மக்கள் காத்திருக்கும் இடத்திற்கு வந்து நிர்வாணமாக ரகளை செய்தார். இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து பெண்ணை அப்புறப்படுத்தினர். மேலும், பெண்ணிடம் விசாரணை நடந்து வருகிறது.

பெண் நிர்வாணமாக உலாவந்த காட்சிகள்:

(The above story first appeared on LatestLY on Mar 26, 2025 06:42 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).