ஆகஸ்ட் 20, லக்னோ (Uttar Pradesh News): உத்தர பிரதேச மாநிலம், கௌசாம்பி (Kaushambi) மாவட்டத்தை சேர்ந்தவர் விமலா தேவி (வயது 36). இவர், தனது மருமகன் ராம்ராஜுடன் (வயது 20) நெருங்கி பழகி வந்துள்ளார். விமலா தேவியின் கணவர் பிந்து வீட்டில் இல்லாத நேரத்தில் ராம்ராஜ் தனது அத்தையுடன் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்துள்ளார். இவர்களது நெருக்கமான உறவு, குடும்பத்தினருக்கு தெரியவந்த நிலையில், வீட்டில் கடுமையான எதிர்ப்புகள் எழுந்தன. இதனால் மனமுடைந்த விமலா தேவி விஷம் குடித்து தற்கொலை (Suicide) செய்து கொண்டார். இதனையறிந்த ராம்ராஜ், தானும் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். தற்போது, அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். CM Rekha Gupta: டெல்லி முதல்வர் ரேகா குப்தா மீது தாக்குதல்.. குஜராத் நபர் கைது..!
போலீஸ் விசாரணை:
இதுகுறித்து, தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், விமலாவின் பெற்றோர், ராம்ராஜ் தான் தனது மகளுக்கு விஷம் கொடுத்துக் கொன்றுவிட்டார் என குற்றம் சாட்டியுள்ளனர். ஆனால், ராம்ராஜின் தாயார் கூறுகையில், காதலில் ஏற்பட்ட பிரிவு காரணமாகவே தற்கொலை செய்துகொண்டுள்ளதாக கூறியுள்ளார். இதுதொடர்பாக, காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தற்கொலை தடுப்பு மற்றும் மனநல உதவி எண்கள்:
டெலி மனாஸ் (Tele Manas) சுகாதார அமைச்சகம் - 14416 அல்லது 1800 891 4416; நிம்ஹான்ஸ் (NIMHANS) + 91 80 26995000 / 5100 / 5200 / 5300 / 5400; பீக் மைண்ட் (Peak Mind) - 080 456 87786; வந்த்ரேவாலா அறக்கட்டளை - 9999 666 555; அர்பிதா தற்கொலை தடுப்பு உதவி எண் - 080-23655557; iCALL - 022-25521111 மற்றும் 9152987821; COOJ மனநல அறக்கட்டளை - 0832-2252525, தற்கொலை தடுப்பு மையம் கோயம்புத்தூர் - 0422-2300999, சினேகா தற்கொலை தடுப்பு மையம் சென்னை - +91 44 2464 0060 மற்றும் +91 44 2464 0050.