Husband Hanging Suicide UP (Photo Credit: @TrueStoryUP X)

ஆகஸ்ட் 25, சம்பல் (Uttar Pradesh News): உத்தர பிரதேச மாநிலம், சம்பல் (Sambhal) மாவட்டத்தின் பஹ்ஜோய் பகுதியை சேர்ந்தவர் கரண் மௌரியா (வயது 29). இவர், சப்னா என்ற இளம்பெண்ணை காதலித்து வந்தார். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு இவர்கள் இருவரும் காதல் திருமணம் செய்துகொண்டனர். இதனையடுத்து, இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. Tractor Accident: டிராக்டர் மீது கண்டைனர் மோதி பயங்கர விபத்து.. 8 பேர் பலி., 43 பேர் படுகாயம்.!

வாலிபர் தற்கொலை:

இந்நிலையில், சப்னா வேறொரு வாலிபருடன் செல்போனில் பேசி பழகியுள்ளார். இதனையறிந்த, அவரது காதல் கணவர் கோபமடைந்தது சண்டையிட்டுள்ளார். இதனால், ஆத்திரத்தில் தனது மனைவி சப்னாவின் கழுத்தை அறுத்துவிட்டு, பின்னர் தானும் தூக்குப்போட்டு தற்கொலை (Hanging Suicide) செய்து கொண்டார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், அவரது மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், உயிருக்கு போராடிய நிலையில், ரத்த வெள்ளத்தில் கிடந்த சப்னா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை தடுப்பு மற்றும் மனநல உதவி எண்கள்:

டெலி மனாஸ் (Tele Manas) சுகாதார அமைச்சகம் - 14416 அல்லது 1800 891 4416; நிம்ஹான்ஸ் (NIMHANS) + 91 80 26995000 / 5100 / 5200 / 5300 / 5400; பீக் மைண்ட் (Peak Mind) - 080 456 87786; வந்த்ரேவாலா அறக்கட்டளை - 9999 666 555; அர்பிதா தற்கொலை தடுப்பு உதவி எண் - 080-23655557; iCALL - 022-25521111 மற்றும் 9152987821; COOJ மனநல அறக்கட்டளை - 0832-2252525, தற்கொலை தடுப்பு மையம் கோயம்புத்தூர் - 0422-2300999, சினேகா தற்கொலை தடுப்பு மையம் சென்னை - +91 44 2464 0060 மற்றும் +91 44 2464 0050.