Breaking: பட்டாசு தயாரிப்பு பணியில் பயங்கர வெடிவிபத்து.. 5 பேர் பலி.!

பட்டாசுகளை தயாரிக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு இருந்தபோது, திடீரென பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.

Breaking: பட்டாசு தயாரிப்பு பணியில் பயங்கர வெடிவிபத்து.. 5 பேர் பலி.!
Andhra Fire Crackers Company Blast (Photo Credit: @xpressandhra X)

ஏப்ரல் 13, விசாகப்பட்டினம் (Andhra Pradesh News): ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள விசாகப்பட்டினம் மாவட்டம், கொட்டாவூட்டலா மண்டலம், கைலாச பட்டினம் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இன்று வழக்கம்போல பணியாளர்கள் தங்களின் பணிகளில் ஈடுபட்டு இருந்தனர். கள்ளக்காதலை கைவிட்டதால் ஆத்திரம்.. கள்ளக்காதலி கட்டிப்பிடித்து எரித்துக்கொலை.. சென்னையில் பயங்கரம்.! 

வெடித்து விபத்து:

இதனிடையே, பட்டாசு ஆலையில் பணியாளர்கள் வேலைபார்த்துக்கொண்டு இருக்கும்போதே திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 5 பேர் வரை பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 7 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். தகவல் அறிந்த மீட்புப்படையினர் நிகழ்விடத்தில் குவிந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

வெடிவிபத்து குறித்த களநிலவரக் காட்சிகள்:

(The above story first appeared on LatestLY on Aug 17, 0644 05:44 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).