Hostel Warden Brutally Attacks (Photo Credit: @ABPNews X)

ஆகஸ்ட் 05, கஜினி (Uttar Pradesh News): உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள கோரக்பூர் (Kasturba Gandhi Balika Vidyalaya) மாவட்டம், கஜினி, உஸ்வான் பாபு பகுதியில் கஸ்தூரிபா காந்தி வித்யாலயா பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளி நிர்வாகத்திற்கு சொந்தமான விடுதியில் தங்கியிருந்து மாணவிகள் பயின்று வருகிறார்கள். இந்நிலையில், விடுதியில் தங்கியுள்ள மாணவிகளை, வார்டன் கொடூரமாக தாக்கிய காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகின. மேலும், அவர் தாக்கியதில் காயமடைந்த மாணவிகளின் உடலில் இருந்த காயமும் அதிர்ச்சியை தந்தன. Stone Pelting on Moving Train: விரைவு இரயில் மீது கல்வீசி தாக்குதல்; பயணி காயம்.. பீகாரில் பகீர் சம்பவம்.! 

துறை ரீதியான விசாரணை:

இந்த விஷயம் குறித்த தகவல் அறிந்த மாணவிகளின் பெற்றோர் பலரும் விடுதி வளாகத்தில் திரண்டு போராட்டம் நடத்தினர். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் விசாரணை நடத்துவதாக உறுதி அளித்தனர். மேலும், மாவட்ட கல்வி அதிகாரி ராமேந்திரா சிங், துறை ரீதியான விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி அளித்தார். வீடியோ வைரலாந்தை தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் 2 ம் தேதி காவல் அதிகாரிகள் முன்னிலையில் விசாரணை நடத்தப்பட்டபோது, வார்டன் தன்னை நிரபராதி என கூறி வந்துள்ளார். பாதிக்கப்பட்ட மாணவிகளிடம் கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மாணவிகள் உடலில் தழும்புகளாக காயங்கள்: