Love Couple Suicide in UP (Photo Credit: @TrueStoryUP X)

ஜூலை 25, லக்னோ (Uttar Pradesh News): உத்தர பிரதேச மாநிலம், ஃபிரோசாபாத்தில் வாலிபர் ஒருவர் தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்த விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்தன. 22 வயதான ஆகாஷ் ஒரு வருடத்திற்கு முன்பு திருமணம் செய்துகொண்டார். அவரது மனைவி கர்ப்பமாக இருந்ததால் அவரது பெற்றோர் வீட்டிற்குச் சென்றிருந்தார். நேற்று (ஜூலை 24) காலை, குடும்பத்தினர் வயல் வேலைக்குச் சென்றிருந்தனர். அவர் வீட்டில் தனியாக இருந்தார். மதியம் குடும்பத்தினர் திரும்பி வந்தபோது, கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. பலமுறை கூப்பிட்ட பிறகும் எந்த பதிலும் இல்லாததால், ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தனர். அப்போது, அறையில் ஆகாஷ் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். Student Suicide: பள்ளியின் 4வது மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை.. நெஞ்சை பதறவைக்கும் வீடியோ.!

காதல் ஜோடி தற்கொலை:

இதனையடுத்து, 19 வயது பாரதி அவரது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை (Hanging Suicide) செய்துகொண்டுள்ளார். இருவரும் கடந்த 2 வருடங்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதை அறிந்த உறவினர்கள் ஆகாஷை திருமணம் செய்துவைத்தனர். இதனால் அவர் தற்கொலை செய்துகொண்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. தனது காதலன் தற்கொலை செய்துகொண்ட சில நேரத்திலேயே காதலியும் தற்கொலை செய்துகொண்டார். இதுதொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை தடுப்பு மற்றும் மனநல உதவி எண்கள்:

டெலி மனாஸ் (Tele Manas) சுகாதார அமைச்சகம் - 14416 அல்லது 1800 891 4416; நிம்ஹான்ஸ் (NIMHANS) + 91 80 26995000 / 5100 / 5200 / 5300 / 5400; பீக் மைண்ட் (Peak Mind) - 080 456 87786; வந்த்ரேவாலா அறக்கட்டளை - 9999 666 555; அர்பிதா தற்கொலை தடுப்பு உதவி எண் - 080-23655557; iCALL - 022-25521111 மற்றும் 9152987821; COOJ மனநல அறக்கட்டளை - 0832-2252525, தற்கொலை தடுப்பு மையம் கோயம்புத்தூர் - 0422-2300999, சினேகா தற்கொலை தடுப்பு மையம் சென்னை - +91 44 2464 0060 மற்றும் +91 44 2464 0050.