![](https://objectstorage.ap-mumbai-1.oraclecloud.com/p/H7eKs7B2tVOw_abojbrxoIB_6t5W29G2St7cuQZAAZxzK6otiY2itlU_lhorOfFB/n/bmd8qrbo34g7/b/uploads-DataTransfer/o/cmstamil.letsly.in/wp-content/uploads/2024/03/PM-Modi-Ujwala-Yojana-Photo-Credit-PMUY.Gov_.com_-380x214.jpg)
மார்ச் 07, புதுடெல்லி (New Delhi): 14.2 கிலோ சிலிண்டருக்கு ரூ.300 மானியம் வழங்கும் உஜ்வாலா திட்டத்தின் கீழ், நடப்பு 2024 - 2025 நிதியாண்டில், பயனர்களின் வங்கிக்கணக்கில் அடுத்த 12 மாதங்களுக்கு வரவுவைக்க பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. 2024-25 நிதியாண்டில் பிரதமரின் உஜ்வாலா யோஜனா திட்டத்தில், மார்ச் 1, 2024 நிலவரப்படி 10.27 கோடிக்கும் அதிகமான பயனாளிகள் இருக்கின்றனர்.
ரூ.12,000 கோடி மானியத்திற்கு ஒப்புதல்: இவர்களின் வங்கிக்கணக்கில் மானியம் வரவு வைக்க, 2024-25 நிதியாண்டில் ரூ.12,000 கோடி செலவு ஆகும். இத்தொகையை விடுவிக்க அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளதால், அடுத்த 12 மாதங்களில் தகுதியுள்ள பயனாளிகளின் வங்கிக் கணக்கில் பணம் நேரடியாக வரவு வைக்கப்படும். Nayanthara and Vignesh Shivan head for divorce?: நயன்தாரா போட்ட சோகமான பதிவு… விக்னேஷ் சிவனுடன் விவகாரத்தா?.!
உஜ்வாலா (Ujjwala Scheme PMUY) திட்டம்: கடந்த 2016ம் ஆண்டு கிராமப்புற, தாழ்த்தப்பட்ட ஏழை-எளிய மக்கள் சிலிண்டர் பயன்படுத்துவதை உறுதி செய்யும் பொருட்டு பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான அரசு சார்பில் பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. தனது மொத்த எல்.பி.ஜி தேவையில் 60% இந்தியா இறக்குமதி செய்து வருகிறது. இதனால் ஏற்படும் விலையேற்றம், அது சார்ந்த பிரச்சனையில் இருந்து ஏழை-எளிய மக்களை பாதுகாக்கவும் இத்திட்டம் பயன்படுகிறது. 14.2 கிலோ எடையுள்ள சிலிண்டருக்கு ரூ.200 என்ற மானியத்துடன் தொடங்கப்பட்ட திட்டத்திற்கு தற்போது ரூ.300 வழங்கபடுகிறது. மாதம் ஒரு சிலிண்டர் முறையில், 12 மாதமும் சிலிண்டர் பெற்று பயனாளிகள் பலன் பெறலாம்.
Cabinet approves extending Rs 300 per 14.2-kg subsidy to Ujjwala beneficiaries in next fiscal starting April 1: Union Minister Piyush Goyal
— Press Trust of India (@PTI_News) March 7, 2024