Former IAS Officer Clash (Photo Credit: X)

அக்டோபர் 31, நொய்டா (Social Viral): உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள நொய்டா, செக்டர் 108ல் உள்ள பாரக்ஸ் லாரெட் சொசைட்டி அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் ஆர்.பி குப்தா. இவர் ஓய்வுபெற்ற மாவட்ட ஆட்சியர் ஆவார்.

சம்பவத்தன்று இவர் தனது குடியிருப்பில் உள்ள லிப்டில் பயணித்தார். அப்போது, பெண்மணி ஒருவர் தனது நாயை வெளிப்புறத்திற்கு அழைத்துசெல்லவும் லிப்டை பயன்படுத்தி இருக்கிறார்.

பெண்மணி நாயை அழைத்து வந்ததால் ஆத்திரமடைந்த முன்னாள் ஆட்சியர், அதனை தனது செல்போனில் வீடியோ எடுத்து இருக்கிறார். இதனை கவனித்த பெண்மணி முன்னாள் ஆட்சியரை தட்டிக்கேட்டுள்ளார். Affair Couple Suicide: கள்ளக்காதல் உறவை கைவிட இயலாமல் பரிதவிப்பு; இருதரப்பு உறவினர்கள் கண்முன் ஜோடி தற்கொலை.! 

இதனால் இருதரப்பும் அங்கு வாக்குவாதம் செய்துகொண்ட நிலையில், பெண்மணி செல்போனை பறித்தால் ஆத்திரமடைந்த முன்னாள் ஆட்சியர் பெண்ணை பளாரென அறைந்தார், தாக்குதல் நடத்தினார்.

இதனையடுத்து, பாதிக்கப்பட்ட பெண்மணி தனக்கு கணவருக்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கவே, நிகழ்விடத்திற்கு விரைந்த அவர் பதில் தாக்குதல் நடத்தினார். சம்பவ இடத்தில் அடுக்குமாடி குடியிருப்பு காவலாளிகள் இருந்ததால் பெரும் சண்டை தவிர்க்கப்பட்டது.

இவ்விவகாரம் தொடர்பாக வீடியோ ஆதாரத்துடன் அங்குள்ள மாயா காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்படவே, புகாரை ஏற்ற காவல் துறையினர்