ஏப்ரல் 20, கான்பூர் (Uttar Pradesh News): உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள கான்பூர், பாபு பூர்வா காவல் எல்லைக்குட்பட்ட கிட்வாய் நகர் பகுதியில் கல்லூரி மாணவி சாலையில் நடந்து சென்றுகொண்டு இருந்தார். அப்போது, அங்கு காரில் வந்த இருவர் கும்பல் பெண்ணின் செல்போனை பறித்து தப்பிச் சென்றது. பெண் குரலிட்டதால் அவர்களை பொதுமக்கள் துரத்த, இளைஞர்கள் காரில் தப்பிச்சென்ற போது அவர்களின் வாகனம் ஆட்டோ மீது மோதி விபத்தில் சிக்கியது. இதனால் இருவரையும் மக்கள் விரட்டிய நிலையில் ஒருவர் தப்பியோடினார். கையில் சிக்கிய மற்றொருவரை பொதுமக்கள் வெளுத்தெடுத்த நிலையில், பெண் அவரை செருப்பால் அடித்தார். அதனைத்தொடர்ந்து, காவல்துறையினர் வசம் இளைஞர் ஒப்படைக்கப்பட்டார். இந்த விஷயம் குறித்த வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகின்றன. மகளின் மாமனாருடன் 4 வது முறை ஓட்டம் பிடித்த பெண்மணி.. கணவர் குமுறல்..! 

கையில் சிக்கிய திருடனை பொதுமக்கள் வெளுத்தெடுத்த காட்சிகள்:

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)