Karnataka Shocker: கார் விற்பனை செய்த விவகாரத்தில் வாடிக்கையாளர் - டீலர் இடையே வாக்குவாதம்; ஆத்திரத்தில் கார் ஏற்றி கொடூர கொலை.!

அம்ரீன் என்ற வாடிக்கையாளரால் கார் ஏற்றி கொலை செய்ய முயற்சிக்கப்பட்ட கார் டீலர், தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Karnataka Shocker: கார் விற்பனை செய்த விவகாரத்தில் வாடிக்கையாளர் - டீலர் இடையே வாக்குவாதம்; ஆத்திரத்தில் கார் ஏற்றி கொடூர கொலை.!
Visual from Video (Photo Credit: X)

நவம்பர் 02, பெங்களூர் (Bangalore): கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூர், புலிகேசி நகர் பகுதியில் கடந்த அக்.18ம் தேதி நள்ளிரவு 12:30 மணியளவில் கார் டீலர் அஸ்கர் என்பவர், அம்ரீன் என்ற வாடிக்கையாளரால் கார் ஏற்றி கொலை செய்ய முயற்சிக்கப்பட்டார். படுகாயத்துடன் மீட்கப்பட்ட அஸ்கர், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கடந்த அக்.18 அன்று அவர் தப்பிக்க சாலையில் அங்கும்-இங்கும் ஓடி, பின் காரின் சக்கரத்தில் சிக்கிய பதைபதைப்பு வீடியோ காட்சிகள் கேமிராவில் பதிவாகி தற்போது வெளியாகியுள்ளன. விசாரணையில், கார் டீலர் அஸ்கரிடம் ரூ.4 இலட்சம் பணம் கொடுக்காமலே அம்ரீன் காரை எடுத்து சென்று, இருவருக்கும் பிரச்சனை நடந்தது அம்பலமானது. இந்த பதைபதைப்பு சம்பவத்தின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. Arvind Kejriwal not Appear to ED: அமலாக்கத்துறை அலுவலகத்தில் டெல்லி முதல்வர் ஆஜராக மறுப்பு - ம.பி-யில் தேர்தல் பிரச்சாரம் தீவிரம்.! 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Nov 02, 2023 03:29 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).