Karnataka Dalit Women Beaten: தலித் பெண்ணை மரத்தில் கட்டிவைத்து செருப்பால் தாக்கிய பயங்கரம்.. இப்படியும் ஒரு காரணத்திற்காக பெரும் கொடுமை...!

மாடு மேய்த்துக்கொண்டு இருந்த பெண்மணியின் மாடு மற்றொருவரின் நிலத்திற்கு சென்றதால், அதனை பிடித்து வர சென்ற பெண்ணை ஜாதியை காரணம் காண்பித்து மரத்தில் கட்டிவைத்து அடித்த கொடுமை நடந்துள்ளது.

Karnataka Dalit Women Beaten: தலித் பெண்ணை மரத்தில் கட்டிவைத்து செருப்பால் தாக்கிய பயங்கரம்.. இப்படியும் ஒரு காரணத்திற்காக பெரும் கொடுமை...!
Dalit Women Beaten by Man (Visual from Viral Video)

பிப்ரவரி 09, கனககிரி: கர்நாடக மாநிலத்தில் உள்ள (Koppal, Karnataka) கொப்பல் மாவட்டம், கனககிரி (Kanakagiri) கிராமத்தில் தலித் சமூகத்தை (Dalit Women) சேர்ந்த பெண்மணி வசித்து வருகிறார். இவர் மாடு மேய்த்துக்கொண்டு இருந்தபோது, எதிர்பாராத விதமாக மாடு அங்குள்ள மற்றொரு உயர்ஜாதி சமூகத்தை சேர்ந்தவரின் தோட்டத்திற்குள் புகுந்ததாக தெரியவருகிறது. அதனை பிடித்து வர பெண்மணி சென்றபோது, ஜாதிய பாகுபாடு எண்ணம் கொண்ட அம்பரேஷ் கம்பர் (Accuse Ambaresh Kambar) என்பவர் பெண்ணை தென்னை மரத்தில் கட்டிவைத்து கடுமையாக தாக்கியுள்ளார். வலிபொறுக்க இயலாத பெண்மணி தன்னை விட்டுவிடும்படி கதறியழுதார். இதுகுறித்த பதறவைக்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகவே, கனககிரி காவல் துறையினர் (Kanakagiri Police) அம்பரேஷை கைது செய்தனர். பெண்மணி சிகிச்சைக்கு மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டார். Jammu Doda Village Sinking: ஜோஷிமத் போல பெரும் பாதிப்பை சந்திக்கும் ஜம்முவின் தோடா.. அதிர்ச்சி சம்பவம் அம்பலம்.!

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Feb 09, 2023 02:40 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).