மார்ச் 05, துபாய் (Sports News): ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நேற்று (மார்ச் 04) நடைபெற்ற முதலாவது அரையிறுதி போட்டியில், இந்தியா-ஆஸ்திரேலியா (IND Vs AUS) அணிகள் மோதின. இதில், இந்தியா, 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பைனலுக்கு சென்றது. இப்போட்டியில், ஜடேஜா வீசிய 21 ஓவரின் 2வது பந்தை ஸ்மித் அடித்தார். அப்போது, அதனை தடுக்க முயன்ற ஜடேஜா (Ravindra Jadeja), மறுபுறம் நின்ற மார்னஸ் லாபுசாக்னேவை (Marnus Labuschagne) எதிர்பாராதவிதமாக பிடித்து ரன் எடுக்க விடாமல் தடுத்தார். இதனை பார்த்த ஸ்மித் கோபமடைந்து, அம்பயரிடம் முறையிட்டார். இதனால் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது. IND Vs AUS Highlights: பைனலில் நுழைந்தது இந்தியா.. விராட், ராகுல் அசத்தல் ஆட்டம்.. இந்தியா மாஸ் வெற்றி..!

மார்னஸை தடுத்த ஜடேஜா:

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)