டிசம்பர் 22, பாம்பன் (Rameswaram News): இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பாம்பன் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள், கடலுக்குள் மீன்பிடிக்க சென்று இருந்தனர். இவர்கள் மீன்பிடித்தபோது, சுமார் 400 கிலோ எடையுள்ள வாள் மீன் (Sword Fish) வலையில் சிக்கி இருக்கிறது. இந்த வாள்மீன் 3 மீட்டர் நீளம் கொண்டு இருந்தது. அரியவகை மீனாக கருதப்படும் வாள் மீன், ரூ.56,000 தொகைக்கு கேரளா வியாபாரிக்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால் மீனவர்கள் பெரும் மகிழ்ச்சிக்கு உள்ளாகினர். மன்னார் கடற்பரப்பில் மீன்பிடித்த போது, வாள் மீன் சிக்கியதாகவும் மீனவர்கள் தெரிவித்தனர். Cold Wave: வடமாநிலங்களை வாட்டி வதைக்கும் குளிர்; பனித்துளிகள் உறைந்து அசத்தல் காணொளி.! 

400 கிலோ எடையுள்ள மீன் வலையில் சிக்கிய மகிழ்ச்சியில் மீனவர்கள்:

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)