Cold Wave: வடமாநிலங்களை வாட்டி வதைக்கும் குளிர்; பனித்துளிகள் உறைந்து அசத்தல் காணொளி.!

அதிக குளிர் காரணமாக புற்களில் இருந்த பனித்துளிகள் அனைத்தும் உறைந்து நிற்கும் நிகழ்வு ஒடிசாவில் நடந்துள்ளது.

Cold Wave: வடமாநிலங்களை வாட்டி வதைக்கும் குளிர்; பனித்துளிகள் உறைந்து அசத்தல் காணொளி.!
Cold Wave Mayurbhanj (Photo Credit: @ANI X)

டிசம்பர் 22, மயூர்பஞ்ச் (Odisha News): தென்மேற்கு பருவமழை கேரளாவில் தொடங்கி, வடக்கு-வடகிழக்கு மாநிலங்கள் வாயிலாக நிறைவுபெற்று, தற்போது தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழையாக இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. இதனிடையே, பருவமழை தொடங்கி நிறைவுபெற்ற வடமாநிலங்களில், தற்போது குளிர்காலம் தொடங்கி இருக்கிறது. இதனால் டெல்லி உட்பட பல்வேறு மாநிலங்களில் கடும் குளிர் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. ஜம்மு காஷ்மீர், உத்திரப்பிரதேசம், பஞ்சாப், ஹரியானா, உத்தரகாண்ட், ஒடிசா, பீகார் உட்பட பல மாநிலங்களில் கடும் குளிர் காரணமாக மக்கள் அவதிப்படுகின்றனர். சில இடங்களில் உறைபனி சூழலும் நிலவுகிறது. இதனிடையே, ஒடிசா மாநிலத்தில் உள்ள மயூர்பன்ச் பகுதியில், இன்று உறைபனி சூழல் நிலவியது. இதனால் புற்களில் இருந்த நீர்த்துளிகள் உறைந்துபோனது. அம்மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கடுமையான பனிமூட்டம் நிலவியது. PM Modi Kuwait Visit: "43 ஆண்டுகளுக்கு பின் குவைத் மண்ணில் இந்திய பிரதமர்" - பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்.! 

உறைபனி காரணமாக புற்களில் நீர் உறைந்து காணப்படும் காட்சிகள்:

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Dec 22, 2024 09:33 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).