
மே 07, கொல்கத்தா (Sports News): டாடா ஐபிஎல் 2025 (TATA IPL 2025) போட்டியில், இன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் (Kolkata Knight Riders Vs Chennai Super Kings) அணிகள் இடையே போட்டி நடைபெறுகிறது. நடப்பு ஐபிஎல் சீஸனின் 57வது ஆட்டம் இன்று கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்ட்னஸ் கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெறுகிறது. போட்டியில் முதலில் கொல்கத்தா அணி பேட்டிங் செய்தது. அந்த அணியின் சார்பில் விளையாடிய வீரர்கள் 20 ஓவரில் 6 விக்கெட் இழந்து 179 ரன்கள் எடுத்தது. இதனால் 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி களமிறங்கியுள்ளது. இன்றைய போட்டியில் சுனில் நரேன் 17 பந்துகளில் 26 ரன்கள் அடித்தார். Rohit Sharma Retirement: டெஸ்ட் போட்டிகளில் இருந்து ரோஹித் சர்மா ஓய்வு: அதிகாரபூர்வ அறிவிப்பு.!
சுனில் நரேன் விக்கெட் இழந்தார்:
தொடர்ந்து அரை சத்தம் நோக்கி விறுவிறுப்புடன் பயணித்தவர், 7.1வது ஓவரில் தனது விக்கெட்டை இழந்தார். நூர் அகமதுவின் பந்தை எதிர்கொண்டவர் தோனியின் மின்னல் வேக செயல்பாடு காரணமாக ஸ்டெம்ப் அவுட் செய்யப்பட்டார்.சுனில் நரேன் விக்கெட்டை எம்.எஸ் தோனி தனது வழக்கமான பார்முலாவை பயன்படுத்தி கைப்பற்றினார். பந்து பேட்டில் பட்டு பரந்திருக்கும் என நினைத்த சுரேன் சுதாரிப்பதற்குள் தோனி விக்கெட்டை எடுத்து முடித்தார். இதன் வீடியோ காட்சிகள் வைரலாகி வருகின்றன.
கண் இமை மூடி திறப்பதற்குள் பறிபோன விக்கெட்:
The Magic show with a blend of lightning 🪄⚡️
2⃣ in 1⃣ package for all #CSK fans to enjoy 🍿
Updates ▶ https://t.co/ydH0hsBFgS #TATAIPL | #KKRvCSK | @noor_ahmad_15 | @msdhoni | @ChennaiIPL pic.twitter.com/06hYoSkdtQ
— IndianPremierLeague (@IPL) May 7, 2025