Sachin Tendulkar (Photo Credit: Twitter)

ஆகஸ்ட் 14, மும்பை (Sports News): இந்திய கிரிக்கெட்டில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்ட நாயகன் சச்சின் தெண்டுல்கர் (Sachin Tendulkar). உலக கிரிக்கெட் வரலாற்றில் பல சாதனைகளை இந்தியாவுக்காக படைத்த நாயகர்களில் இவர் குறிப்பிடத்தக்கவர்.

அதிக கிரிக்கெட் ரசிகர்களை இன்றைய தொழில்நுட்பங்கள் இல்லாத காலத்திலேயே பெற்ற சச்சின் தெண்டுல்கர், இன்றளவில் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்றாலும், பல வீரர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறார். அவரின் மகனும் கிரிக்கெட்டில் களமிறக்கப்பட்டு இருக்கிறார். Inevitable contribution of Tamilnadu: இறுதிவரை விடுதலைக்காக உறுதியுடன் போராடிய தமிழகம். தமிழகப் போராளிகளின் வியக்கவைக்கும் பங்களிப்பு.!

சச்சின் டெண்டுல்கர் கடந்த ஆகஸ்ட் 14, 1990 அன்று தனது 17 வயதில் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில் சச்சின் 119 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். அவரது விளையாட்டு அன்று பெருமளவு கவனிக்கப்பட்டது.

இந்த நிகழ்வு நடந்து தற்போது கிட்டத்தட்ட 33 ஆண்டுகள் ஆகிவிட்டன. 90-களில் சச்சின் எப்படி இருந்தார் என்பதை இந்த ஒற்றை புகைப்படமே நமக்கு உணர்த்தி இருக்கிறது.