Priyansh Arya: 42 பந்துகளில் சதம் விளாசி அசத்திய பிரியன்ஷ் ஆர்யா.. பஞ்சாப் மாஸ் சம்பவம்.!

இன்றைய ஆட்டத்தில் சதம் கடந்து விளாசிய பிரியன்ஷ் ஆர்யாவின் அதிரடியால் சென்னை அணி திணறலை எதிர்கொண்டது. கிரிக்கெட் தொடர்பான அப்டேட்களை உடனுக்குடன் லேட்டஸ்ட்லி தமிழ் பக்கத்தில் பெறுங்கள்.

Priyansh Arya: 42 பந்துகளில் சதம் விளாசி அசத்திய பிரியன்ஷ் ஆர்யா.. பஞ்சாப் மாஸ் சம்பவம்.!
Priyansh Arya 100| IPL 2025 (Photo Credit: @IPL X)

ஏப்ரல் 08, முள்ளன்பூர் (Sports News): டாடா ஐபிஎல் 2025 (TATA IPL 2025) போட்டித் தொடரில், இன்று இரவு 07:30 மணியளவில் பஞ்சாப் கிங்ஸ் Vs சென்னை சூப்பர் கிங்ஸ் (Punjab Kings Vs Chennai Super Kings) அணிகள் மோதிக்கொள்ளும் ஆட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பேட்டிங் தேர்வு செய்ததைத்தொடர்ந்து, சென்னை அணி பௌலிங் செய்து வருகிறது. தொடர் தோல்விக்கு பின் இப்போட்டியிலாவது சென்னை அணி வெற்றிபெறுமா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது. PBKS Vs CSK Toss Update: வெற்றியை எட்டிப்பிடிக்குமா சென்னை? டாஸ் வென்று பஞ்சாப் பந்துவீச்சு.! 

பிரியன்ஷ் வர்மா அசத்தல்:

இந்நிலையில், பஞ்சாப் அணியின் சார்பில் தொடக்கத்தில் களமிறங்கிய பிரியன்ஷ் ஆர்யா (Priyansh Arya) பவுண்டரி, சிக்ஸர் மழையை பொலிந்து அசத்தினார். அவர் 7 பவுண்டரி, 9 சிக்ஸர் என 42 பந்துகளில் 103 ரன்கள் அடித்து அணியின் ஸ்கோரை அதிரடியாக உயர்த்தினார். இதனால் சென்னை அணிக்கு 200 ரன்கள் கடந்த இலக்கு நிர்ணயம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆர்யாவின் ஆட்டம் இன்று பஞ்சாப் அணியின் ஆட்டத்துக்கு மிகப்பெரிய திருப்பு முனையாக அமைந்துள்ளது.

பிரியன்ஷ் சதம் அடித்து அசத்தல்:

அதிரடியாக மாஸ் காட்டிய பிரியன்ஷ்:

(The above story first appeared on LatestLY on Apr 08, 2025 08:57 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).