அக்டோபர் 15, சென்னை (Chennai News): சர்வதேச அளவில் நீடிக்கும் போர், பங்குச்சந்தையில் தங்கம், வெள்ளி மீதான முதலீடுகள், தங்கம்-வெள்ளியின் தினசரி உற்பத்தி மற்றும் விற்பனை எதிர்பார்ப்பு நிலவரம் உட்பட பல்வேறு காரணிகள் கொண்டு ஒவ்வொரு நாளும் தங்கம்-வெள்ளியின் விலை (Gold Silver Rate Today) நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை தங்கம், வெள்ளி விலை என்பது கணிசமான தொகை குறைந்து இருந்தது. ஆனால், தங்கமும், வெள்ளியும் 2025ல் போட்டிபோட்டு உயர்ந்து வருகிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னதாக தங்கம் விலை சென்னையில் சவரனுக்கு ரூ.30,000 வரை விற்பனை செய்யப்பட்டது. ஆனால், தற்போது ஒரு சவரன் தங்கம் விலை ரூ.94 ஆயிரத்தை கடந்துள்ளது. வெள்ளியின் விலையும் கிலோவுக்கு ரூ.25,000 என்ற மதிப்பில் இருந்து தற்போது ரூ.2,00,000 என்ற விலை உச்சத்தை சந்தித்துள்ளது. நாளைய வானிலை: இன்று முதல் 4 நாட்களுக்கு வெளுத்துக்கட்டப்போகும் மழை.. வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!
தங்கம்-வெள்ளி விலை உயர காரணம் என்ன? (Gold Silver Rate):
உலகளாவிய பங்குசந்தையில் தங்கம், வெள்ளி மீதான முதலீடுகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. அதே நேரத்தில், நாடுகள் அளவில் சீனா அளவுக்கு அதிகமாக தங்கத்தை வாங்கி குவிகிறது. இதனால் தங்கத்தின் மீதான எதிர்பார்ப்பு அதன் தினசரி உற்பத்தியை தாண்டி இருப்பதால், தங்கத்தின் விலை அதிகரித்து வருகிறது. அதே நேரத்தில், வெள்ளி பொருட்களை மின்சார பொருட்கள் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் அதிகம் பயன்படுத்துகின்றன. சமீபகாலமாக எலக்ட்ரிக் ஸ்கூட்டர், எலக்ட்ரிக் கார் என மின்சாதன பொருட்களின் உற்பத்தி புதிய அத்தியாயத்தில் பயணம் செய்து வருகிறது. இதனால் வெள்ளியின் தேவையில் தினமும் கிடைக்கும் அளவில் பாதிக்கும் மேல் நிறுவனங்கள் பயன்படுத்துகின்றன. கொள்முதல் அதிகமானதால் வெள்ளியின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது.
இன்று காலை தங்கத்தின் விலை (Chennai Gold Rate Today) :
இந்நிலையில், இன்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு நேற்றைய விலையில் இருந்து ரூ.280 உயர்ந்து ரூ.11,860 க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரன் தங்கம் விலை ரூ.280 உயர்ந்து ரூ.94,880 க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலை ரூ.1,000 உயர்ந்து ரூ.2,07,000 க்கு விற்பனை செய்யப்படுகிறது. தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் வேளையில் தங்கம், வெள்ளி விலை வரலாறு காணாத விலை உச்சம் அடைந்துள்ளது, அதனை வாங்க நினைத்தோரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.