Murder (Photo Credit: Pixabay)

ஆகஸ்ட் 15, திட்டக்குடி (Cuddalore News): கடலூர் மாவட்டத்தில் உள்ள திட்டக்குடி (Tittakudi), பெருமுளை கிராமத்தில் வசித்து வருபவர் சின்னப்பொண்ணு (வயது 50). இவருக்கு மணிகண்டன், மணிமாறன் என்ற 2 மகன்கள் இருக்கின்றனர். இருவருக்கும் திருமணம் முடிந்து, தங்களின் குடும்பத்துடன் தனித்தனியே வசித்து வருகிறார்கள். சின்னபொண்ணுவின் கணவர் உயிரிழந்துவிட்ட நிலையில், கடந்த 5 மாதமாக வதிஷ்டபுரம் பகுதியில் வீடு எடுத்து தனியே வசித்து வந்துள்ளார்.

பெண் கொலை:

சின்னபொண்ணுவின் மூத்த மகன் மணிகண்டன், தனது தாயாரை நேற்று பார்க்க சென்றுள்ளார். அச்சமயம், வீட்டின் முன்புறம் மூடப்பட்டு இருந்தது. மாற்று சாவி கொண்டு திறந்து இருக்கிறார். வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, தனது தாயார் சின்னப்பொண்ணு இரத்த வெள்ளத்தில் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். வீட்டின் அறையில் 70 வயது மதிக்கத்தக்க முதியவரும் சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்தவாறு சடலமாக இருந்தார். Boy Dies By Dog Bite: வெறிநாய் கடித்து 4 வயது சிறுவன் உயிரிழந்த பரிதாபம்..! 

விசாரணையில் அதிர்ச்சி தகவல்:

இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்தவர் திட்டக்குடி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவலை அறிந்த அதிகாரிகள் நிகழ்விடத்திற்கு விரைந்து இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், சின்னபொண்ணுவின் வீட்டில் சடலமாக மீட்கப்ட்டவர் யார்? என்ற விசாரணையை முன்னெடுத்தனர். விசாரணையில், அவர் பெரம்பலுர் மாவட்டத்தில் உள்ள லாடபுரம் பகுதியில் வசித்து வரும் சதாசிவம் (வயது 70) என்பது தெரியவந்தது.

கள்ளக்காதல் காரணமா?

இவர் அப்பகுதியில் செயல்பட்டு வந்த பள்ளியில் காவலாளியாக வேலை பார்த்து வந்த நிலையில், கடந்த 2 மாதத்திற்கு முன்பு வயது மூப்பால் பணிஓய்வு பெற்றுள்ளார் என்பது உறுதியானது. சின்னபொண்ணுவின் மார்பு மற்றும் முதுகு பகுதியில் குத்திக்கொலை செய்யப்பட்டுள்ள நிலையில், கள்ளக்காதல் விவகாரத்தில் கொலை நடந்ததா? வேறு கரணம் உள்ளதா? என விசாரணை நடந்து வருகிறது.