JustIN: சொகுசு கார் பள்ளத்தில் கவிழ்ந்து 4 பேர் துடிதுடித்து பலி.. கள்ளக்குறிச்சியில் சோகம்.!

கள்ளக்குறிச்சியில் சொகுசு கார் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

JustIN: சொகுசு கார் பள்ளத்தில் கவிழ்ந்து 4 பேர் துடிதுடித்து பலி.. கள்ளக்குறிச்சியில் சோகம்.!
Kallakurichi Car Accident (Photo Credit : @ThanthiTV X)

ஜூலை 20, கள்ளக்குறிச்சி (Kallakurichi News): கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூர் அருகே அத்திப்பாக்கம் கிராமத்தில் சொகுசு கார் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இந்த கார் விபத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அதிவேகமாக சென்று கொண்டிருந்த சொகுசு காரின் முன்பக்க டயர் திடீரென வெடித்ததால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. Chennai News: காதல் தோல்வியால் விபரீதம்.. அக்காவுக்கு மெசேஜ் அனுப்பிவிட்டு தங்கை தற்கொலை.! 

கார் விபத்தில் 4 பேர் பலி :

இந்த கோர விபத்தில் காரில் பயணம் செய்த சங்கீதா, சுபா, தனலட்சுமி, ராகவேந்திரன் ஆகியோர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். ஆயுதப்படை காவலர் உட்பட 5 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விஷயம் தொடர்பாக கள்ளக்குறிச்சி காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் உயிரிழந்த நால்வரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

(The above story first appeared on LatestLY on Jul 20, 2025 12:28 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).