EB Meter | Summer (Photo Credit: Pixabay)

ஏப்ரல் 19, சென்னை (Summer Tips Tamil): ஒவ்வொரு கோடைகாலமும் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் என்பது கடுமையான அளவு அதிகரித்து வருகிறது. இதனால் மனிதர்களுக்கு பல்வேறு உடல்நல பாதிப்பு ஏற்படுகிறது. அதே நேரத்தில், கணினி உட்பட மின்சாதனங்கள், இயந்திரங்கள் என அனைத்தும் அதிக வெப்பத்தை எதிர்கொண்டு பழுதடைகிறது. மின்சாதனம், செல்போன், இயந்திரங்கள் என அனைத்துக்கும் மின்சாரம் தேவைப்படுகிறது. இதனால் கோடையில் மின்கட்டணமும் அதிகம் வருகிறது. சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து தப்பிக்க பலரும் ஏசி, பிரிட்ஜ், ஃபேன், ஏர் கூலர் உட்பட பல சாதனங்களை அதிகம் பயன்படுத்த தொடங்குவோம். இதனால் மின் கட்டணமும் உயரத் தொடங்கும். இவ்வாறான கோடை காலங்களில் மின் கட்டணத்தை கட்டுப்படுத்துவது எப்படி என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்.

மின் கட்டணத்தை குறைக்க என்ன செய்யலாம்? (How to Reduce EB Bill in Summer Days Tips in Tamil)

ஏசி பயன்படுத்தும் நபர்கள் அறையின் குளிர்ச்சி தன்மையை 24 முதல் 26 டிகிரி வரை என்ற நிலையில் பராமரிக்கலாம். 18 முதல் 23 டிகிரி வைத்தால், ஏசி அதிக நேரம் தொடர்ந்து இயங்கும். இதனால் கட்டாயம் மின்சார கட்டணம் உயரும் வாய்ப்புகள் அதிகம். அதே நேரத்தில், ஏசி பயன்படுத்துவோர் தங்களது வீட்டின் கதவு, ஜன்னல் மூடி இருப்பதை உறுதி செய்யுங்கள். தேவையில்லாமல் ஏசி காற்று தெருவுக்கு வீசினால் பில் தொகை இடிபோலத்தான் உங்களின் தலையில் இறங்கும். அதிலும் குழந்தைகள் இருக்கும் வீட்டில் இந்த பிரச்சனை அதிகம் நடக்கும். முன்விரோதத்தில் கொடுமை.. 16 வயது மாணவரை நிர்வாணப்படுத்தி தாக்குதல்.. அதிர்ச்சி காட்சிகள் லீக்.! 

ஏசி, பிரிட்ஜ் பயன்படுத்துவதில் கவனம்:

அடிக்கடி பிரிட்ஜை திறப்பதை தவிர்த்து அவசியத்துக்கு மட்டும் திறந்து பொருளை எடுங்கள். ஏனெனில் ஏசி போல பிரிட்ஜில் கூலிங் முறை செயல்பட வேண்டும் என்பதால், அதிக நேரம் பிரிட்ஜை திறந்து வைத்தால் அதில் உள்ள கூலிங் வெளியேறும். பின் நீங்கள் வைக்கும் பாயிண்டுக்கு ஏற்ப கூலிங்கை உறுதி செய்ய பிரிட்ஜ் தொடர்ந்து இயங்கி மின்கட்டணம் உயரலாம். பிரிஜ்ட், ஏசி போன்ற பொருட்களை வாங்குவோர் 4 முதல் 5 நட்சத்திர குறியீடுகளை பெற்றதா? என்பதை சோதித்து வாங்க வேண்டும். விலை குறைவு, மலிவு, சலுகை என குறைந்த நட்சத்திர தரம் கொண்டவற்றை வாங்கினால் கட்டாயம் இபி பில் உங்களுக்கு தலைவலியை உண்டாக்கும்.

பிற ஆலோசனைகள்:

மின்விசிறியை பயன்படுத்துவோர் ஒவ்வொரு வாரமும் அதனை சுத்தம் செய்யலாம். அதேபோல, நாள் முழுக்க ஒரே மின்விசிறியை தொடர்ந்து பயன்படுத்தாமல் 2 வைத்துக்கொண்டு சுழற்சி முறையில் அதனை பயன்படுத்தலாம். கோடை காலத்தில் வாஷிங் மெஷினில் துவைப்போர் 2 துணி சேர்ந்தவுடன் துணிகளை துவைக்க வேண்டாம். அதன் கொள்ளளவு நிரம்பும் வரை துணி சேர்ந்ததும் வாஷிங் மெஷினை இயக்கலாம். தேவையில்லாமல் எந்த பொருளையும் இயக்க வேண்டாம். லைட் உட்பட அனைத்து மின் சாதனங்கள் தேவையில்லாத நேரம் அணைத்து வைத்திருப்பதை உறுதி செய்யுங்கள்.