Baba Vanga (Photo Credit: Wikipedia Commons)

ஜூன் 07, நியூயார்க் (Baba Vanga News): இயற்கை சீற்றத்தினால் 12 வயதில் பார்வையை இழந்த பல்கெரியா நாட்டு ஜோதிடர் பாபா வாங்க, தனது 75 வயது வரை பார்வையின்றி வாழ்ந்தாலும், அவருக்கு எதிர்காலத்தை பார்க்கும் ஞானத்தை கடவுள் கொடுத்ததாக கூறி எதிர்காலத்தில் நடந்த பல தகவலை தெரிவித்தார். அமெரிக்காவில் நடைபெற்ற இரட்டை கோபுர தாக்குதலையும் அவர் முன்கூட்டியே கணித்து இருந்தார். அந்நிகழ்வு நடந்த பின்னரே பாபா வாங்காவின் கூற்றுகள் தொடர்பான தகவல் வெளியாகின.

இந்த நிலையில், பாபா வாங்கா அணு ஆயுத போர் தொடர்பான எச்சரிக்கையை தெரிவித்துள்ளதாக அவரின் ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்த எச்சரிக்கை கடந்த 2014 - 2016 க்கு இடைப்பட்ட காலத்தில் எழுந்தாலும், அவை பின்னாளில் நடக்கவில்லை. ஆனால், தற்போதைய நிலையில் அணு ஆயுத போர் மற்றும் சூரிய புயல் தொடர்பான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. Baby in Borewell: 300 அடி ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 2 வயது குழந்தை; மீட்பு பணிகள் தீவிரம்., பெற்றோர் கண்ணீர்.!

2023ல் அணுசக்தி ஆலையில் வெடிப்பு நிகழும். இதனால் ஆசிய நாடுகளில் நச்சு மேகங்கள் குடியேறும். இந்த நச்சு காற்றால் கடுமையான நோய்கள் ஏற்படும். இதனால் பிற நாடுகளும் பாதிக்கப்படும். பூமியின் சுற்றுப்பாதை மாறும். சூரியனுக்கு நெருக்கமாக உருவாகும் சூரிய புயல் காரணமாக பனிப்பாறைகள் உருகும்.

2023 காலநிலை சக்திவாய்ந்த சூரிய புயல் பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தும். சூரிய புயலினால் பெரிய அளவிலான தொழில்நுட்ப தோல்வி ஏற்படும். வல்லரசு நாடு உயிரியல் ஆயுதத்தை பயன்படுத்தலாம். இதனால் நூற்றுக்கணக்கான இறப்புகள் ஏற்படும். ஆய்வகத்தில் குழந்தைகள் அதிகளவில் உருவாக்கப்படுவார்கள். அந்த குழந்தைகளுக்கான வரையறை, பெற்றோர்கள், கண்களின் நிறம் ஆகியவற்றை தேர்வு செய்துகொள்ளலாம்.