
மே 02, புளோரிடா (World News in Tamil): அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாகாணத்தைச் சேர்ந்த பெண்மணி அலெக்சிஸ் வோன் யேட்ஸ் (வயது 35). இவருக்கு திருமணம் ஆகி கணவர், 2 குழந்தைகள் இருக்கின்றனர். இவரின் கணவருக்கு ஏற்கனவே ஒரு பெண்ணுடன் திருமணம் நடந்து 15 வயதுடைய மகன் இருக்கிறார். தற்போது இவர்கள் குடும்பமாக வசித்து வருகிறார்கள். இதனிடையே, அலெக்சிஸ் கணவர் வீட்டில் இருக்கும்போது தனிமை நேரங்களை விரும்பியதாக தெரியவருகிறது. தொடர் பணி அழுத்தம் காரணமாக அவர்களால் சில சமயங்களில் எதிர்பார்த்தபடி இணைய முடியவில்லை. இதனிடையே, கணவர் வேலைக்குச் சென்றபின்னர், இரவில் கணவர் அலுவலகத்தில் வேலை ரீதியாக இருப்பது அதிகரித்தால் அலெக்சிக்கு கணவரின் மூத்த மனைவி மகனான 15 வயது வளர்ப்பு மகனின் மீது பார்வை திரும்பி இருக்கிறது. GT Vs SRH: வெற்றியை தக்கவைத்து புள்ளிப்பட்டியலில் முன்னேறுமா குஜராத்? இன்று ஹைதராபாத் அணியுடன் மோதல்.!
வளர்ப்பு மகனுடன் சித்தி உல்லாசம்:
இதனால் சிறுவனை தனது வலையில் வீழ்த்த நினைத்த செவிலியர் தனது 2 குழந்தைகளை உறங்க வைத்துவிட்டு 15 வயது சிறுவனுடன் டிவி பார்ப்பது, கேம் விளையாடுவது என நெருக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறார். பின்னர் சிறுவனிடம் பாலியல் ரீதியான கருத்துக்களை உரையாடி நெருக்கத்தை அதிகரித்துள்ளார். இந்த நெருக்கம் ஒருகட்டத்தில் இருவரையும் தனிமையில் கூட வைத்துள்ளது. இவ்வாறாக தொடர்ந்த செயலை சிறுவனின் தந்தை ஒருநாள் நேரில் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். அதனைத்தொடர்ந்து, காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்படவே, அதிகாரிகள் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும், பெண்ணின் செவிலியர் உரிமமும் ரத்து செய்யப்பட்ட இலையில், தற்போது அவர் சட்ட வழக்கை எதிர்கொண்டு இருக்கிறார். சிரர்களுடன் பாலியல் உறவில் இருந்ததாக பெண்ணின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.