ஜனவரி 30: குழந்தை திருமணம் (Child Marriage) என்பது இந்தியாவில் அதிகப்படியாக நடைபெறும் விஷயங்களில் ஒன்றாகிவிட்டது. இன்றளவில் அவை காதல் (Love) என்ற பெயரில் படித்த இளைஞர்களால் (Youngsters) மேற்கொள்ளப்பட்டு வருவதுதான் வருத்தமே. இந்நிலையில், அசாம் மாநிலத்தில் உள்ள நாகன் மாவட்டம் (Nagaon, Assam), ருபாத்திஹாத் பகுதியில் நடைபெற்ற குழந்தை திருமணம் ருபாத்திஹாத் காவல் துறையினரால் (Rupahihat Police) தடுத்து நிறுத்தப்பட்டது. அங்கு சிறுமியை திருமணம் செய்ய தயாராக இருந்த உபைதுல் இஸ்லாம் (Obaidul Islam), அவருக்கு திருமண ஏற்பாடுகளை செய்த குல்ஸர் ஹுசைன் (Gulzar Hussain), ரூபோல் அமின் (Rufol Amin) ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். குழந்தை திருமணம் தொடர்பான விஷயங்களில் திருமணம் செய்தவர் மட்டுமல்லாது, அதற்கு உடந்தையாக இருப்பவரும் அரசியல் சட்டத்தின்பால் கைது செய்யப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. Varisu Movie Family Audience: குடும்பங்கள், முதியவர்களின் அருமையை புரிந்துகொள்ள மாணவர்களுக்கு காட்சிப்படுத்தப்பட்ட வாரிசு திரைப்படம்..!

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)