Couple (Photo Credit: Pixabay)

ஏப்ரல் 22, நவி மும்பை (Maharashtra News): மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நவி மும்பை, கல்யாண் நகரில் இருந்து பேருந்து ஒன்று சென்றுகொண்டு இருந்தது. அப்போது, ஏசி பேருந்தில் காதல் ஜோடி பயணித்த நிலையில், அவர்கள் கடைசி சீட்டில் இருந்தனர். பேருந்து தொடர்ந்து தனது இலக்கை நோக்கி பயணம் செய்த நிலையில், காதல் ஜோடி எல்லை மீறிய செயலில் ஈடுபட்டதாக தெரியவருகிறது. இந்த விஷயம் தொடர்பான அதிர்ச்சி காட்சிகள் வெளியாகி இருக்கின்றன. மேலும், அந்த விடியோவை இளைஞர் எடுத்ததாகவும் கருத்துக்கள் சொல்லப்படுகிறது. பொண்டாட்டி கூட சேர்ந்து வாழுப்பா.. அறிவுரை கூறிய பெண் குத்திக்கொலை.. இளைஞர் வெறிச்செயல்.!

ஓடும் பேருந்தில் அதிர்ச்சி செயல்:

இந்த விஷயம் குறித்து தற்போது வரை காவல் நிலையத்தில் புகார்கள் ஏதும் அளிக்கப்படாத நிலையில், வீடியோ வைரலாகியதன் பேரில் பேருந்தின் நடத்துனர் துறை ரீதியான நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். சுமார் 22 நொடிகள் பதிவு செய்யப்பட்ட காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளன. பன்வேலில் இருந்து கல்யாண் நோக்கி பேருந்து பயணிக்கும்போது இந்த சம்பவம் நடந்துள்ளது. பேருந்து போக்குவரத்து நெரிசலில் சிக்கியபோது வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்திய அரசியலமைப்பு சட்டப்படி பொதுஇடத்தில் தனிநபராகவோ, குழுவாகவோ ஆபாச செயலில் ஈடுபட்டால் 3 மாதம் தண்டனை ரூ.1000 அபராதம் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.