Narendra Modi | Benjamin Netanyahu (Photo Credit: @NarendraModi / @BenjaminNetanyahu X)

மே 07, ஜெருசலேம் (World News): ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பஹல்காமில், இந்தியாவின் ஸ்விட்சர்லாந்து என அழைக்கப்பட்டு தனியார் ரிசார்ட்டில் கடந்த ஏப்ரல் 22 அன்று பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் பொதுமக்கள் 26 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். தாக்குதல் சம்பவத்துக்கு லஸ்கர்-இ-தொய்பா அமைப்பின் நிழல் அமைப்பு பொறுப்பேற்றது. இந்த தாக்குதலுக்கு உரிய பதிலடி கொடுக்கப்படும் என இந்தியா திட்டவட்டமாக எச்சரித்து ராணுவ நடவடிக்கையை துரிதப்படுத்தியது. மேலும், பாகிஸ்தானின் ஆதரவுடன் நடந்த இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து சிந்து நதிநீர் ஒப்பந்தம், சார்க் விசா ஒப்பந்தத்தை ரத்து செய்து உத்தரவிட்டது. Operation Sindoor: ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பதில் சொன்ன பெண் அதிகாரிகள்.. பேராயுதத்தை கையில் எடுத்த இந்தியா..! 

உலக நாடுகள் ஆதரவு:

எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஊக்குவித்து வரும் வரும் பாகிஸ்தானுக்கு கண்டனம் தெரிவித்து வந்த இந்தியா மே 07 மாலை 4 மணியளவில் நாடு தழுவிய போர் ஒத்திகைக்கு அறிவிப்பு வெளியிட்டது. இந்நிலையில், இந்தியா இன்று (மே 07) அதிகாலை சுமார் 1 மணி முதல் 01:25 வரை பாகிஸ்தான், ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாதிகள் நிலைகளை குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த வான்வழி தாக்குதலில் முப்படையும் இணைந்து செயல்பட்டுள்ளது. பயங்கரவாதிகளை மட்டும் அழிக்கும் எண்ணத்துடன் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வெற்றி கிடைத்துள்ளது. பயங்கரவாதிகள் தாக்கப்பட்ட விஷயத்துக்கு பதில் நடவடிக்கையாக பாகிஸ்தான் இந்தியாவுக்கு எதிரான தாக்குதலை நடத்தினால் பதிலுக்கு பதில் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் நடவடிக்கைக்கு இஸ்ரேல் உட்பட உலக நாடுகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.

இஸ்ரேல் உறுதுணையாக இருப்பதாக அறிவிப்பு: