How To Remove Warts Naturally: உங்களுக்கு மரு இருக்கா?அதனை அகற்ற வலியில்லாத வீட்டு வைத்தியம்.!
மருக்களை நீக்குவதற்கு வீட்டில் உள்ள எண்ணெய்களேயே நாம் பயன்படுத்தலாம்.
டிசம்பர் 13, சென்னை (Chennai): இன்றைய காலக்கட்டத்தில் மருக்கள் பலரைய பாடாய்படுத்துகிறது. இது முகம், கை, கால், விரல்கள் என எல்லா இடங்களிலும் ஏற்படுகிறது. இதனை நம்மால் வீட்டிலேயே நீக்க முடியும்.
மருக்களை நீக்கும் முறை: மருக்களை(Warts) நீக்க ஆர்கனோ மற்றும் ஆலிவ் ஆயிலை எடுத்து நன்றாக கலந்து கொள்ளவும். இதை மருக்கள் இருக்கும் பகுதியில் தடவி வந்தால் சரியாகி விடும். மேலும் மருக்களை நீக்க அயோடினைப் பயன்படுத்தலாம். ஆனால் இதனை அதிகமாக தடவினால் பாதிப்பு ஏற்படும். எனவே இதை பட்ஸ் கொண்டு, மருக்கள் இருக்கும் பகுதியில் தடவலாம். மேலும் கொஞ்சம் தேங்காய் எண்ணெய்யை தடவி விட்டு அதன் மேல் இந்த அயோடின் சொட்டை தடவலாம். Aarudhra Gold Trading Scam: ஆருத்ரா நிதிநிறுவனம் ரூ.2438 கோடி மோசடி விவகாரம் : பரப்பான வாக்குமூலம் கொடுத்த நடிகர் ஆர்.கே.சுரேஷ்!
இல்லையெனில் மருந்து தடவப்பட்ட நூல் அல்லது டென்டல் ப்ளோஸ்யை எடுத்து கொள்ள வேண்டும். இந்த நூலை அல்லது டென்டல் ப்ளோஸ்யை கொண்டு மருவை சுற்றி கட்டிக் கொள்ள வேண்டும். உங்கள் நூல் தூசி நிறைந்ததாக மாறி விட்டால் அடிக்கடி மாற்றிக் கொள்ளவும். நூல் காட்டுவதால் மரு பகுதியில் இரத்த ஓட்டம் தடைபட்டு அது தானாகவே உதிர்ந்து விடும்.
அதுமட்டுமின்றி பூண்டு சாறுடன், எலுமிச்சை சாறு, பேக்கிங் சோடாவை கலந்து கொள்ளுங்கள். இந்த கலவையை மரு இருக்கும் இடத்தில் பூசுங்கள். ஒரு மணி நேரத்திற்கு அப்படியே வைத்து விடவும். பின்னர் கழுவுங்கள். இப்படி 4 முதல் 5 நாட்கள் செய்து வந்தால் மருக்கள் தானாகவே உதிரும். Wife Swapping Case In Bengaluru: மனைவியை நண்பர்களுடன் உல்லாசமாக இருக்க வற்புறுத்திய கணவர்: அனுதினமும் நடந்த கொடுமை.!
மேலும் வைட்டமின் ஈ மாத்திரைகளை உடைத்து மரு உள்ள பகுதியில் தடவலாம் அல்லது வைட்டமின் ஈ ஆயிலை தடவி மசாஜ் செய்ய வேண்டாம். இந்த முறையை மரு போகும் வரை செய்யலாம். வைட்டமின் ஈ ஆயில் தடவுவதற்கு முன்னாடி மரு பகுதியை நன்றாக சுத்தப்படுத்தி கொள்வது மிகவும் முக்கியமானது.
(The above story first appeared on LatestLY on Dec 13, 2023 02:38 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

