Dead Body (Photo Credit: Pixabay)

ஆகஸ்ட் 28, கொடைரோடு (Dindigul News): திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைரோடு, ஜெகநாதபுரம் பகுதியில் வசித்து வருபவர் அருண்குமார் (வயது 24). இவர் துரித உணவக கடையில், சமையல் மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். சிலுக்குவார்பட்டி பகுதியில் வசித்து வந்தவர் நாகம்மாள் (வயது 21). இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட பழக்கமானது பின்னாளில் காதலாக மாறியது. உயிருக்கு உயிராக காதலித்து வந்த இருவரும், கடந்த 10 மாதங்களுக்கு முன் பெற்றோரின் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டனர். தற்போது நாகம்மாள் கர்ப்பமான நிலையில், கடந்த வாரம் தான் அவருக்கு வளைகாப்பு நடைபெற்றது. பின் நாகம்மாள் அவரின் பெற்றோரால் சொந்த ஊருக்கு அழைத்துச் செல்லப்பட்டார். தற்போது கர்ப்பிணி நாகம்மாளுக்கு குழந்தை பிறக்க சில நாட்களே எஞ்சியிருக்கும் நிலையில், மனைவியை பார்ப்பதற்கு அருண் குமார் தினம் இரவு நேரத்தில் தனது மாமனாரின் வீட்டிற்கு வந்து சென்றுள்ளார். Rekha Nair: நடிகை ரேகா நாயரின் கார் ஏறி-இறங்கியதில், சாலையில் உறங்கியவர் பரிதாப பலி.. ஓட்டுநர் கைது.! 

மாரடைப்பு ஏற்பட்டு மாமியார் பலி:

கடந்த ஆகஸ்ட் 25ம் தேதி இரவில், சிலுக்குவார்பட்டி பகுதியில் இருசக்கர வாகனத்தில் அவர் சென்றுகொண்டு இருந்த நிலையில், அம்பைநாயக்கனூர் பள்ளிவாசல் எதிரில் அவர் படுகாயத்துடன் சடலமாக கிடந்தார். அவரின் மர்ம மரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, மருமகனின் மரணம் மாமியார் சின்னபொண்ணுவை (வயது 46) மனரீதியாக பாதித்து இருக்கிறது. தனது பெண்ணின் கணவர் இப்படி இளவயதில் மரணம் அடைந்துவிட்டார் என வருந்தி இருக்கிறார். இந்நிலையில், மருமகனின் மரணத்தால், மகளின் நிலையை எண்ணி வருந்திய மாமியார் சின்னப்பொண்ணு, மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். தனது காதல் கணவரும் இறந்துவிட, தாய் மாரடைப்பால் உயிரிழக்க, நாகம்மாளும் தினமும் மனவேதனையில் தவித்து மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி செய்யப்பட்டுள்ளார்.