Vasai Daughter Rape Case | Visual from Video (Photo Credit: @rafique_kamdar X_

மார்ச் 27, தானே (Maharashtra News): மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தானே மாவட்டம், வசாய், நாலாசோப்ரா பகுதியில் வசித்து வருபவர் ரமேஷ் பாரதி. இவருக்கு திருமணம் முடிந்து மனைவி, 24 வயதுடைய மகள் இருக்கின்றனர். இதனிடையே, கடந்த 2 ஆண்டுகளாக ரமேஷ் பாரதி தனது வளர்ப்பு மகளை பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார் என கூறப்படுகிறது. இந்த விஷயம் இளம்பெண்ணுக்கு பிடிக்கவில்லை. கடந்த 2 ஆண்டுகளாக வளர்ப்பு தந்தையின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் பலனில்லை. இதனிடையே, ஒருகட்டத்தில் உச்சகட்ட ஆத்திரத்திற்கு சென்ற இளம்பெண், வளர்ப்பு தந்தையின் ஆணுறுப்பை அறுத்தார். Taramani College Girl Rape Case: சென்னையில் மீண்டும் பேரதிர்ச்சி.. 16 வயது கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை.. விசாரணையில் அதிர்ச்சி தகவல்.! 

வளர்ப்பு தந்தையின் அந்தரங்க உறுப்பை அறுத்த மகள்:

மேலும், உடலில் பல இடங்களில் சரமாரியாக குத்தி இருக்கிறார். இதனால் படுகாயமடைந்த ரமேஷ், அக்கம் பக்கத்தினரால் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டார். இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த நாலாசோப்ரா காவல்துறையினர், 24 வயது இளம்பெண்ணை கைது செய்துள்ளனர். மேலும், அவர் கொடுத்த புகாரின் பேரில், ரமேஷுக்கு எதிராகவும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் மருத்துவ சிகிச்சையில் இருப்பதால், சிகிச்சை முடிந்ததும் கைது நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அம்மாடியோவ்.. கரும்பு இயந்திரத்தில் சிக்கிக்கொண்ட பெண்ணின் முடி.. பதறவைக்கும் காட்சிகள்.. தப்பிய உயிர்.! வீடியோ உள்ளே.! 

பெண் தந்தையின் ஆணுறுப்பை வெட்டி அக்கம் பக்கத்தினரிடம் வாதம் செய்த காட்சிகள்:

பெண்கள் மற்றும் குழந்தைகள் உதவி எண்கள்:

சைல்டுலைன் இந்தியா - 1098; பெண்கள் உதவி எண் - 181; தேசிய மகளிர் ஆணையம் ஹெல்ப்லைன் - 112; வன்முறைக்கு எதிரான தேசிய மகளிர் ஆணையம் ஹெல்ப்லைன் – 78271 70170; போலீஸ் பெண்கள் / மூத்த குடிமக்கள் உதவி எண் - 1091 / 1291; காணாமல் போன குழந்தை மற்றும் பெண்கள் குறித்து புகார் அளிக்க - 1094. ஆன்லைன் வழியாக பெண்கள் & குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து புகார் அளிக்க: https://eservices.tnpolice.gov.in/CCTNSNICSDC/ComplaintRegistrationPage?3