செப்டம்பர் 24, ஐதராபாத் (Telangana News): தெலுங்கானா மாநிலம், போரபண்டா (Borabanda) காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் பேருந்து மோதி சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார். தனியார் பள்ளியில் 5-ஆம் வகுப்பு படித்து வரும் சிறுவன் சிவசரண் (வயது 11) பள்ளி முடிந்து சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, ​​எதிரே வந்த பள்ளி பேருந்து சைக்கிள் மீது மோதியது. இதில், சிறுவன் சாலையில் விழுந்து பேருந்து (School Bus) சக்கரங்களுக்கு அடியில் சிக்கி, அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் நேற்று (செப்டம்பர் 23) மாலை நிகழ்ந்துள்ளது. இதுகுறித்து, காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. Sexual Assault Case: 2 சிறுமிகளை சீரழித்த இளைஞர் என்கவுண்டரில் சுட்டுக்கொலை; இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்.!

சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள்:

(ట్విట్టర్, ఇన్‌స్టాగ్రామ్ మరియు యూట్యూబ్‌తో సహా సోషల్ మీడియా ప్రపంచం నుండి సరికొత్త బ్రేకింగ్ న్యూస్, వైరల్ వార్తలకు సంబంధించిన సమాచారం సోషల్ మీడియా మీకు అందిస్తోంది. పై పోస్ట్ యూజర్ యొక్క సోషల్ మీడియా ఖాతా నుండి నేరుగా పొందుపరచడం జరిగింది. లేటెస్ట్‌లీ సిబ్బంది ఈ కంటెంట్ బాడీని సవరించలేదు లేదా సవరించకపోవచ్చు. సోషల్ మీడియా పోస్ట్‌లో కనిపించే అభిప్రాయాలు మరియు వాస్తవాలు లేటెస్ట్‌లీ అభిప్రాయాలను ప్రతిబింబించవు, అలాగే లేటెస్ట్‌లీ దీనికి ఎటువంటి బాధ్యత వహించదు.)