Viral Video: பிஎம்டபிள்யு பேனட்டில் இளைஞர்; தந்தையின் காரில் மாஸ் கட்டிய சிறுவன்.. ஆப்படித்த காவல்துறை.!

17 வயது சிறுவன் காரை இயக்கி 2 ஐடி ஊழியர்கள் பலியான சோகம் மறையாத நிலையில், வேறொரு இடத்தில் 17 வயது சிறுவன் கார் பேனட்டில் ஒருவரை உட்கார வைத்து வீதிஉலா வந்த சம்பவம் நடந்துள்ளது.

Viral Video: பிஎம்டபிள்யு பேனட்டில் இளைஞர்; தந்தையின் காரில் மாஸ் கட்டிய சிறுவன்.. ஆப்படித்த காவல்துறை.!
Man On BMW Bannet (Photo Credit: Instagram).jpg

மே 27, கல்யாண் (Mumbai News): மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு 17 வயது சிறுவன் மதுபோதையில் இயக்கிய கார் ஒன்று 2 ஐடி நிறுவன ஊழியர்களின் உயிரை பறித்தது. இந்த சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி, சிறுவனின் தந்தை மற்றும் தாத்தா ஆகியோர் கைது செய்யப்பட்டு இருக்கின்றனர். மோட்டார் வாகன சட்டவிதிகளின்படி சிறார்களை வாகனம் இயக்க அனுமதிப்பது தண்டனைக்குரிய குற்றம் என்பதால், அவரின் பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வழக்கில் இருந்து பேரனை காப்பாற்ற முயன்று, சட்டவிரோத செயலை மேற்கொண்ட தாத்தாவும் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், மும்பை கல்யாண், சிவாஜி சௌக் பகுதியில் 17 வயது சிறுவன் தனது தந்தையின் காரை இயக்கினார். அவர் தனது பிஎம்டபிள்யு காரின் பென்னட்டில் ஒருவரை அமரவைத்து அங்கும்-இங்குமாக வீதிஉலா வந்தார். இந்த விஷயம் தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வழக்கை சந்திக்கவே, காவல் துறையினர் சர்ச்சைக்குரிய நபரை கைது செய்தனர். Husband Kills Wife: கள்ளக்காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த மனைவி கொலை; தூக்கில் தொங்கவிட்டு நாடகமாடும் குடும்பம்?.!  

View this post on Instagram

 

A post shared by NDTV (@ndtv)

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on May 27, 2024 05:06 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).