ஏப்ரல் 07, நொய்டா (Uttar Pradesh News): உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள கிரேட்டர் நொய்டாவில் வசித்து வரும் இளம்பெண் சாயா சர்மா. இவர் சைவ உணவு மட்டும் சாப்பிடும் நபர் ஆவார். நேற்று இரவு நேரத்தில் சாப்பிட வெஜிடபிள் பிரியாணி ஆர்டர் செய்துள்ளார். உணவும் டெலிவரி செய்யப்பட்ட பின்னர் அவர் பசியால் இரண்டு வாய் எடுத்து சாப்பிட்ட நிலையில், அதில் சிக்கன் இருந்துள்ளது. இதனால் சைவ பிரியாணி ஆர்டர் செய்த தனக்கு சிக்கன் பிரியாணி வழங்கப்பட்டதாக பெண் கண்ணீருடன் புகார் அளித்துள்ளார். இதுதொடர்பான வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. உணவகத்தின் செயலுக்கு கண்டனங்கள் குவிந்து வருகின்றன. Madras Eye: வேகமெடுக்குது மெட்ராஸ் ஐ.. சென்னைவாசிகளே உஷார்.! 

பெண் தனது ஆதங்கத்தை தெரிவிக்கும் காணொளி:

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)