ஆகஸ்ட் 13, பெங்களூரு (Karnataka News): கர்நாடக தலைநகர் பெங்களூருவில் இன்று காலை, பரபரப்பான நகர சாலையில் திடீரென வால்வோ பேருந்து கட்டுப்பாட்டை இழந்தது. தொடர்ந்து சுமார் 10 வினாடிகளுக்கு முன்னால் சென்ற வாகனங்கள் மீது பேருந்து மோதிக்கொண்டே இருந்தது. இதில் முன்னால் சென்ற இருசக்கர வாகனங்கள் மட்டுமின்றி, கார்களும் மோதின. இந்த விபத்தில் இரண்டு பேர் பலத்த காயம் அடைந்துள்ளனர், மேலும் சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் முழுவதும் பேருந்தில் ஓட்டுநர் இருக்கைக்கு பின்னால் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. பஸ் ஏன் கட்டுப்பாட்டை இழந்தது என்று ஓட்டுநருக்கு புரியவில்லை என்பது வீடியோவில் தெளிவாக தெரிகிறது. நடத்துனர் ஓட்டுநரிடம் வந்து பிரேக் போடச் சொல்கிறார். ஓட்டுநர் பிரேக் போட்டாலும் பேருந்து நிற்கவில்லை. இதையடுத்து, போக்குவரத்து நிறுத்தப்பட்டு, காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். DRDO Successfully Tests Anti-Tank Missile: இந்தியாவின் புதிய சாதனை.. ஏவுகணை சோதனை வெற்றி.. சாதித்து காட்டிய டிஆர்டிஓ!

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)